search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா: 16, 17-ந் தேதிகளில் நடக்கிறது
    X

    ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா: 16, 17-ந் தேதிகளில் நடக்கிறது

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா வருகிற 16, 17-ந் தேதிகளில் நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் உள்ளது. இங்குள்ள ஹசரத் சேகு முகம்மது (ஒலி), ஹசரத் சையதலி பாத்திமா (ரலி) தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    இதையொட்டி 16-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் ஓதுதல் தொடங்குகிறது. காலை 7 மணிக்கு குர்ஆன் தமாம், காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி ஊர்வலம், சந்தனக்குடம் தர்காவுக்கு கொண்டு வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 9 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 

    10 மணிக்கு பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் தலைமையில் சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை மவ்லூது ஷரீப் ஓதுதல், மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு ஹதீஸ் ஆரம்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 12 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நன்றி நவிலல் நிகழ்ச்சியும், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 6 மணிக்கு நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் தலைமையில் நேர்ச்சை வினியோகம் செய்தல் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    கந்தூரி விழா ஏற்பாடுகளை ஆத்தங்கரை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் செய்துள்ளனர்.
    Next Story
    ×