search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமானாரின் முத்திரை பதித்த மோதிரம்
    X

    பெருமானாரின் முத்திரை பதித்த மோதிரம்

    நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான்.
    முஸ்லிம்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்குமிடையே நடந்த போர்களின் நோக்கங்களும் குறிக்கோள்களும் எதிரிகளின் பொருட்களைச் சூறையாடுவதோ, உயிர்களை அழிப்பதோ, மக்களைக் கொன்று குவிப்பதோ அல்லது இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும்படி எதிரியை நிர்ப்பந்திப்பதோ அல்ல. மாறாக, இப்போர்களின் மூலம் முஸ்லிம்களின் ஒரே குறிக்கோள் மற்றும் அடிப்படை நோக்கம் இஸ்லாமிய அழைப்புப் பணிதான். முஸ்லிம்கள் இதுநாள் வரை அனுபவித்த துன்பங்கள், சோதனைகள், சந்தித்த போர்கள், கொடுமைகள் ஆகிய அனைத்திலும் இஸ்லாமிய அழைப்புப் பணி ஒன்று மட்டுமே அடிப்படை நோக்கமாக இருந்தது.

    சமாதான ஒப்பந்தத்தின்படி பத்து ஆண்டுகளுக்குப் போரை நிறுத்திக் கொள்ளுதல் என்ற அம்சம் முக்கியமானது. இது முஸ்லிம்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. முஸ்லிம்கள் குறைஷிகளுடன் ஒருபோதும் தாங்களாகப் போரைத் தொடங்கியதில்லை. மாறாக, எப்போதும் குறைஷிகள்தான் முதலில் போரைத் தொடங்கினர். அதனால் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியைப் பரப்புவதற்கு முஸ்லிம்களுக்குப் பெருமளவில் வாய்ப்பு ஏற்பட்டது. பெரும் முயற்சி செய்து போருக்குக் காட்டிய ஆர்வத்தை விடப் பல மடங்கு ஆர்வத்தை இஸ்லாமியர்கள் இப்பணியில் காட்டினர்.

    நபி (ஸல்) உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைக்க நாடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அரசர்கள் முத்திரையிடாத எந்த மடலையும் படிக்கமாட்டார்கள்' என்று சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மது ரஸுலுல்லாஹ்' ('இறைத்தூதர் முஹம்மது') என்பதாகும். 'முஹம்மது' என்னும் சொல் ஒரு வரியிலும் 'ரசூலு' ('தூதர்') என்னும் சொல் ஒரு வரியிலும் 'அல்லாஹி' ('அல்லாஹ்வின்) எனும் சொல் ஒரு வரியிலும் பொறிக்கப்பட்டிருந்தது.

    பல நாட்டு மன்னர்களுக்கு நபிகளார் கடிதம் எழுதினார்கள். எகிப்து நாட்டு மன்னருக்கு எழுதியதாவது, “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.

    நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.

    வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே இசைவான ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; அதாவது நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறுங்கள்; இதன் பிறகும் நீங்கள் இதனைப் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று இருந்தது.

    இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தஆவை தேர்வு செய்தார்கள். அக்கடித்தை புரிந்து கொண்ட மன்னர் முகவ்கிஸ், “இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன். அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றைத் தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ, பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாகப் பேசப்படும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான் மேலும் யோசித்துக் கொள்கிறேன்” என்று ஹாத்திபுக்குப் பதில் கூறினார்.

    “நபியே! உங்கள் இறைவனால் அருளப்பட்ட இந்த வேதமானது முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் இதை நம்பிக்கை கொள்ளலாம் விரும்பியவர் நிராகரித்து விடலாம். அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை.” (அல்குர்ஆன் 18:29)

    ஆதாரம்: Volume :1:3:65, 3:57:3106, திருகுர்ஆன் 3:64, 18:29

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×