search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரம்ஜான் புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
    X

    ரம்ஜான் புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

    புனித இரவையொட்டி நேற்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    ரம்ஜான் மாதத்தில் லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு முழுவதும் தூங்காமல் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம்.

    இதன்படி நேற்று, புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக ரமலான் நோன்பின் மாண்பு குறித்தும், புனித இரவின் சிறப்பு குறித்தும் மதகுருமார்கள் பயான் (சொற்பொழிவு) செய்தனர்.

    ராமநாதபுரம், கீழக் கரை, ஏர்வாடி, ராமேசு வரம், பரமக்குடி, மண்ட பம், பெருங்குளம், உச்சிப் புளி, புதுநகரம், என்மனங் கொண்டான், புதுமடம், இருமேனி, பாம்பன், தங்கச்சிமடம், கமுதி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், பெரியபட்டணம், ரெகுநாதபுரம், அழகன் குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டினம், பாரதி நகர், காரிக்கூட்டம், வாணி, சாத்தான்குளம், பெரியபட்டணம், வழுதூர், வாலாந்தரவை, உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்கள் முழுவதும் மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டிருந்தது.

    இந்த பள்ளிவாசல்களில் நேற்று இரவு விடிய விடிய சிறப்பு தொழுகை நடைபெற்றது. உலக அமைதிக் காகவும், மக்களி டையே நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.

    பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளி வாசலிலும், மதர ஸாக்களிலும், வீடுகளி லும் நடைபெற்றது. இதில் முஸ்லிம்கள் உற்சாகத் துடன் கலந்து கொண்டு திருக்குரான் ஓதி இறை வனை தொழுதனர்.
    Next Story
    ×