search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: இறைவனின் இனிய பாதுகாப்பு
    X

    நோன்பின் மாண்புகள்: இறைவனின் இனிய பாதுகாப்பு

    வழிகளில் நல்ல வழி, கெட்ட வழி என்று இரண்டு வகை உண்டு. அல்லாஹ்வும் அவனது ரசூலும் காட்டிய வழி நல்வழி. அதற்கு எதிரானது தான் ஷைத்தான் நம்மை ஏமாற்றிக் காட்டிக்கெடுக்கும் தீயவழி.
    வழிகளில் நல்ல வழி, கெட்ட வழி என்று இரண்டு வகை உண்டு. அல்லாஹ்வும் அவனது ரசூலும் காட்டிய வழி நல்வழி. அதற்கு எதிரானது தான் ஷைத்தான் நம்மை ஏமாற்றிக் காட்டிக்கெடுக்கும் தீயவழி.

    அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்: 'இறை நம்பிக்கையாளர்களே! இஸ்லாமில் முழுமையாக நீங்கள் நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுடைய பகிரங்கமான பகைவனாக இருக்கிறான்'. (2:208)

    'நிச்சயமாக ஷைத்தான் அடியார்களுக்கு மத்தியில் குழப்பம் செய்திடுவான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்'. (17:53)
    'ஓரிறை நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர் கள்; எவர் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ அப்பொழுது நிச்சயமாக அவன் மானக்கேடானதைக் கொண்டும், வெறுக்கப்பட்டதைக் கொண்டும் ஏவுவான்'. (24:21)

    'நபியே நீர் கூறுவீராக! என் இறைவா ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்'. (23:97)

    நாம் நேரான பாதைகளில் செல்கிறபோது, நம் மனம் தவறுகளை நோக்கி திரும்புகிறது என்றால், இதன் பின்னணியில் இருப்பது ஷைத்தான் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அதனால் தான் எந்த ஒரு நற்செயலை செய்யத் தொடங்கும் முன்னர் 'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தா னிர்ரஜீம்' (இறைவா தூக்கி வீசப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று ஓதிக்கொள்ள அல்லாஹ்வும், அவனது ரசூலும் கட்டளையிட்டுள்ளார்கள்.

    'நீங்கள் உணவு சாப்பிடும் முன்பு 'பிஸ்மில்லாஹ்' என்று சொல்லிக்கொள்ளுங்கள்; இல்லையெனில், உம்முடன் ஷைத்தானும் சேர்ந்து (அவ்வுணவிலுள்ள பரகத் எனும் இறையருளை) சாப்பிடுகிறான்'. (நூல்: ஷரஹ் சுன்னா)

    'நிதானம் அல்லாஹ்விற்குரியது, அவசரம் ஷைத்தானுக்குரியது'. (நூல் : திர்மிதி)

    நம்மை வழிகெடுக்கும் ஷைத்தானைக் குறித்தும், அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவது குறித்தும் ஏராளமான பதிவுகள் உள்ளன. அவை அனைத்தும் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

    நமது வாழ்நாள் முழுவதும் ஷைத்தானின் வழியில் இருந்து விலகி இருக்க, திருக்குர்ஆன் காட்டும் திருவழியிலும், நபிகளார் காட்டும் நல் வழியிலும் என்றும் நடப்போம், அளவில்லா நன்மைகள் பெறுவோம்.
    Next Story
    ×