என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இஸ்லாமின் வளர்ச்சியும் குறைஷிகளின் கோபமும்
Byமாலை மலர்18 Oct 2016 7:38 AM GMT (Updated: 18 Oct 2016 7:38 AM GMT)
நபிகளார் தைரியமாக முஸ்லிம்களான நம்பிக்கையாளர்களுடன் இஸ்லாமிய அழைப்பை வெளிப்படையாகச் செய்யத் தொடங்கினர்.
“நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட போது நபிகளார் தைரியமாக முஸ்லிம்களான நம்பிக்கையாளர்களுடன் இஸ்லாமிய அழைப்பை வெளிப்படையாகச் செய்யத் தொடங்கினர்.
ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று தனது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையினரையும் மற்றவர்களையும் சந்தித்துப் பேசியபோது, நபிகளாரின் தந்தையின் சகோதரரின் மகன் அபூ லஹப் “உனது தந்தையின் சொந்தங்களுக்கு நீ பெரும் தீங்கிழைக்கிறாய்.
இந்த அழைப்பு மிகவும் இழிவானது. உன்னை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நாமே தடுத்துவிடுவோம்” என்று கோபத்துடன் பேசினான். ஆனால் நபிகளாரின் மீது பாசம்காட்டி வளர்த்த அபூதாலிப் “நான் உயிருடன் இருக்கும்வரை முஹம்மதை பாதுகாப்பேன், அவருக்கு உதவி செய்வேன். ஆனால் நான் காலகாலமாகப் பின்பற்றி வரும் மார்க்கத்தை விட்டுவிட மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
அதற்கு நபிகளார் “இரத்த பந்தத்திற்கான கடமைகளை நான் நிறைவேற்றுவேன். ஆனால் உங்களுடைய நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ் மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும். அல்லாஹ்விற்கு மற்றொன்றை இணையாக்கினால் கடும் வேதனையை நீங்கள் எதிர்நோக்குவீர்களென உங்களையெல்லாம் எச்சரிக்கிறேன்” என்று எல்லாத் தருணங்களிலும் எல்லாக் கிளையினரிடமும் சொல்லி வந்தார்கள்.
நபிகளார் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லமாட்டார் என்று தெரிந்தவர்கள் இது குறித்து யோசிக்க ஆரம்பித்தனர். ஆனால் அபூ லஹப் “நீ நாசமாகப் போ. இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று ஆதங்கப்பட்டான். அப்போது ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும். அவனும் நாசமாகட்டும்’ என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பட்டது.
இஸ்லாமிய அழைப்பை நிறைவேற்றும்போது கண்டிப்பாக மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும். பொய்யுரைக்கிறார், சூனியம் செய்கிறார், பைத்தியகாரர் என்ற அவச்சொல்லையெல்லாம் நபிகளார் சந்திக்க நேரிடும் என்பதாலும் அவற்றை முஹம்மது நபி (ஸல்) தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மற்ற நபிகளின் வரலாறுகளை முன்னுதாரணமாக இறைவசனங்களாக இறைவன் அருளியிருந்தான். அதைப் பற்றியெல்லாம் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தெரிந்தே வைத்திருந்தனர். அதனால் யாருடைய சொல்லும் அவர்களைப் பாதிக்கவில்லை. இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்தார்கள்.
ஏகத்துவ அழைப்பிற்கு மக்களின் ஆதரவு பெருகியது. இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சிக்கல்கள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சி அதிகரித்தது. அதனைக் கண்டு குறைஷிகள் கோபமடைந்தனர்.
திருக்குர்ஆன் 26:214, 111:1-5, ஸஹீஹ் புகாரி 5:65:4770
- ஜெஸிலா பானு.
ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும், சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்று தனது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையினரையும் மற்றவர்களையும் சந்தித்துப் பேசியபோது, நபிகளாரின் தந்தையின் சகோதரரின் மகன் அபூ லஹப் “உனது தந்தையின் சொந்தங்களுக்கு நீ பெரும் தீங்கிழைக்கிறாய்.
இந்த அழைப்பு மிகவும் இழிவானது. உன்னை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நாமே தடுத்துவிடுவோம்” என்று கோபத்துடன் பேசினான். ஆனால் நபிகளாரின் மீது பாசம்காட்டி வளர்த்த அபூதாலிப் “நான் உயிருடன் இருக்கும்வரை முஹம்மதை பாதுகாப்பேன், அவருக்கு உதவி செய்வேன். ஆனால் நான் காலகாலமாகப் பின்பற்றி வரும் மார்க்கத்தை விட்டுவிட மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்னார்.
அதற்கு நபிகளார் “இரத்த பந்தத்திற்கான கடமைகளை நான் நிறைவேற்றுவேன். ஆனால் உங்களுடைய நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ் மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும். அல்லாஹ்விற்கு மற்றொன்றை இணையாக்கினால் கடும் வேதனையை நீங்கள் எதிர்நோக்குவீர்களென உங்களையெல்லாம் எச்சரிக்கிறேன்” என்று எல்லாத் தருணங்களிலும் எல்லாக் கிளையினரிடமும் சொல்லி வந்தார்கள்.
நபிகளார் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லமாட்டார் என்று தெரிந்தவர்கள் இது குறித்து யோசிக்க ஆரம்பித்தனர். ஆனால் அபூ லஹப் “நீ நாசமாகப் போ. இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று ஆதங்கப்பட்டான். அப்போது ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும். அவனும் நாசமாகட்டும்’ என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பட்டது.
இஸ்லாமிய அழைப்பை நிறைவேற்றும்போது கண்டிப்பாக மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும். பொய்யுரைக்கிறார், சூனியம் செய்கிறார், பைத்தியகாரர் என்ற அவச்சொல்லையெல்லாம் நபிகளார் சந்திக்க நேரிடும் என்பதாலும் அவற்றை முஹம்மது நபி (ஸல்) தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மற்ற நபிகளின் வரலாறுகளை முன்னுதாரணமாக இறைவசனங்களாக இறைவன் அருளியிருந்தான். அதைப் பற்றியெல்லாம் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தெரிந்தே வைத்திருந்தனர். அதனால் யாருடைய சொல்லும் அவர்களைப் பாதிக்கவில்லை. இஸ்லாமிய அழைப்பை தொடர்ந்தார்கள்.
ஏகத்துவ அழைப்பிற்கு மக்களின் ஆதரவு பெருகியது. இஸ்லாமை ஏற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தில் இஸ்லாமை ஏற்காதவர்களுக்குமிடையே சிக்கல்கள் தோன்றின. நாளுக்கு நாள் இஸ்லாமின் வளர்ச்சி அதிகரித்தது. அதனைக் கண்டு குறைஷிகள் கோபமடைந்தனர்.
திருக்குர்ஆன் 26:214, 111:1-5, ஸஹீஹ் புகாரி 5:65:4770
- ஜெஸிலா பானு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X