search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரியபட்டிணம் தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று நடக்கிறது
    X

    பெரியபட்டிணம் தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று நடக்கிறது

    பெரியபட்டணம் மகான் செய்யதுஅலி ஒலியுல்லாஹ் தர்கா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று 19-ந்தேதி நடைபெறுகிறது.
    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் மகான் செய்யதுஅலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. ஆண்டு தோறும் இங்கு சந்தனக் கூடு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். கடந்த 9-ந் தேதி 115-வது ஆண்டின் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.. இதை தொடர்ந்து இன்று (19-ம் தேதி) சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

    பெரியபட்டணம் ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளி வாசலிருந்து யானை, குதிரைகளுடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று தர்கா வந்தடையும். வருகிற 20-ந்தேதி பகல் கூடு, 30-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இந்த விழாவில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வதால் மத நல்லிணக்க விழாவாக நடத்தப்படுகிறது.
    Next Story
    ×