search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி
    X

    தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி

    கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தன்வந்திரி கோவிலில் தரும் முக்குடி எனும் மருந்தினை பருகுவதால் தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
    தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும், அந்நோயைத் தீர்த்து நல முடன் வாழ வைக்கும் கோவிலாகக் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் அமைந்திருக்கிறது.

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலில் சந்தான கோபாலன் எனும் கதகளி வழிபாடு நடத்தினால் அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.

    28 வகையான மூலிகைகள், பச்சை மருந்து ஆகியவைகளைத் தயிரில் கலந்து தயாரிக்கப்படும் முக்குடி எனும் மருந்தினை இக்கோவிலின் தன்வந்திரி சிலையின் கையிலுள்ள குடத்தில் வைத்திருந்து எடுத்துத் தருகின்றனர். இதனைப் பெற்றுப் பருகுவதால் தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். (இதனைப் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்)

    விழாக் காலங்களில், கயற்றேல் வானம் என்ற சிறப்பு பூஜை செய்யப் படுகிறது. இப்பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு ஆஸ்துமா, வாத நோய்கள் போன்றவை குண மடையும்.

    அமாவாசை நாட்களில் நடக்கும் முன்னோர் வழிபாடு (பிதுர்காரியம்) நிகழ்வில் படைக்கப்படும் தாள்கறி எனும் உணவைப் பெற்றுச் சாப்பிடுவதால் நோய்கள் தீரும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
    Next Story
    ×