search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எந்தெந்த கிழமையில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்
    X

    எந்தெந்த கிழமையில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்

    திருவண்ணாமலையில் எந்தெந்த கிழமையில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் நோய்கள் நீங்கும்.

    திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் செய்த பாவங்கள் யாவும் விலகும். புண்ணியம் தொடரும்.

    செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் தீராக்கடன்கள் தீரும். தரித்திரம் அகன்று செல்வம் சேரும்.

    புதன்கிழமை கிரிவலம் வந்தால், ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் மேன்மையுறுவர்.

    வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ‘குரு’ என்னும் பெயர் அடைந்து புகழ் பெறுவர்.

    வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால், அயன, சயன, சுக போகங்கள், புத்திர பாக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும்.

    சனிக்கிழமை கிரிவலம் வந்தால் தன, தான்யம் பெருகும். வியாபாரம் பெருகி அளவில்லா லாபம் கிடைக்கும்.

    எப்போது நடக்க வேண்டும்?

    பிரம்ம முகூர்த்தத்தில் அண்ணாமலையைக் கிரிவலம் வந்தால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும்.

    மாலை நேரம் வலம் வந்தால் தன, தான்யங்கள் மிகுதியாக வளர்ந்து பெருகும்.

    நள்ளிரவில் கிரிவலம் வந்தால் அஷ்டமா சித்திகள் அனைத்தும் கிடைக்கும்.
    Next Story
    ×