search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவங்களைப் போக்கும் பரணி தீபம்
    X

    பாவங்களைப் போக்கும் பரணி தீபம்

    தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
    மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் அடியெடுத்து வைக்கின்றனர்.

    தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (1-12-2017) வெள்ளிக்கிழமை, இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

    அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும். ஐஸ்வரியம் பெருகும். அன்றைய தினம் பிரதோஷமும் வருகின்றது. எனவே நந்தியெம்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
    Next Story
    ×