search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் தங்கம் சேமிக்க முடியவில்லை என்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
    X

    வீட்டில் தங்கம் சேமிக்க முடியவில்லை என்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

    தங்கம் வாங்க முடியவில்லை என்றும், வீட்டில் தங்கம் தங்குவதில்லை என்றும் கவலைப்படுபவர்களுக்கு என்றே பரிகாரம் உள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
    செவ்வாய்க் கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் ஒரு பித்தளைக் குடத்தில் துவரம்பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி கொள்ள வேண்டும்.

    அந்த குடத்தின் மேல் ஒரு தேங்காயை கவிழ்த்து வைக்க வேண்டும். பிறகு குடும்பத்தாருடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, சுவாமியின் முன் குடத்தை வைத்து, அபிஷேக ஆராதனைகள் செய்தல் வேண்டும்.

    அர்ச்சகரிடம், ஸ்வர்ண தோசம் நீங்க செவ்வாய் கிரக பூஜைத்தானம் என்று கூறி அவரைப் பெற்றுக் கொள்ளும்படி கூறி அவரிடம் குடத்தை கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து விட வேண்டும். பிறகு கடலை அவித்து தானம் செய்ய வேண்டும்.

    இப்படி பரிகாரம் செய்தால் வீட்டில் தங்கம் நிலையாகத் தங்கும்.
    Next Story
    ×