search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விஷக்கடியை குணமாக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன்
    X

    விஷக்கடியை குணமாக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன்

    சதுரங்கவல்லப நாதர் திருக்கோவிலில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மனை வேண்டிக்கொண்டால் எலிக்கடி, விஷப்பூச்சி நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது பூவனூர் திருத்தலம். இங்கு சதுரங்கவல்லப நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது.

    அதற்கு அடுத்தாற்போல், தமிழ்நாட்டில் இந்த ஆலயத்தில் மட்டும் தான் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருப்பது விசேஷமாகும். இந்த அம்மனை வழிபட்டால் விஷக்கடிகள் குணமாகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எலிக்கடி, விஷப் பூச்சி கடிகளுக்கு இந்த ஆலயத்தில் தரும் வேரை கட்டிக் கொண்டால், விஷம் இறங்கி விடுவதாக கூறுகிறார்கள்.

    விஷக்கடி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதி முன்பாக உள்ள சூலத்தின் எதிரே நின்று தங்கள் கையில் வேர் கட்டிக் கொண்டால், விரைவில் நோய் குணமாவது அதிசயமாக உள்ளது.

    Next Story
    ×