search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய் தீர்க்கும் காவல் தெய்வம் புன்னைநல்லூர் மாரியம்மன்
    X

    நோய் தீர்க்கும் காவல் தெய்வம் புன்னைநல்லூர் மாரியம்மன்

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில். இந்த ஆலய அம்மனை வழிபட்டால், நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில். தஞ்சைப் பகுதியை ஆண்ட சோழ மன்னர்கள், தஞ்சையைச் சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்து வழிபட்டு வந்ததாகவும், அதன்படி கீழ்திசையில் அமைந்த காவல்தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்றும் கூறப்படுகிறது.

    இந்த அம்மன் வெப்பு நோயை விரட்டும் தேவியாக, புற்றுருவாய் புன்னை வனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். இந்த ஆலயத்தில் உள்ள கருவறையில் வீற்றிருக்கும் அன்னையின் உருவம் புற்று மண்ணால் ஆனது. எனவே இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தைலக்காப்பு செய்யப்படுகிறது. அந்த ஒரு மண்டலமும் அன்னையின் உக்கிரம் அதிகமாகும் என்பதால், இளநீர் மற்றும் தயிர் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    கோடை காலத்தில் அம்மனின் சிரசிலும், முகத்திலும் முத்து முத்தாக வியர்த்து இருப்பதை இன்றும் காண முடியும். எனவே இந்த ஆலய அம்மனை ‘முத்துமாரியம்மன்’ என்றும் அழைப்பார்கள். உடலில் தோன்றும் பரு, கட்டி, அம்மை நோய் போன்றவற்றுக்கு இங்கு வந்து வழிபட்டால், நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயம் தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    Next Story
    ×