search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செய்வினை காரணமாக ஏற்படும் பாதிப்பினை நீக்கும் பரிகாரம்
    X

    செய்வினை காரணமாக ஏற்படும் பாதிப்பினை நீக்கும் பரிகாரம்

    செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். இதற்கான சிறந்த பரிகாரத்தை பார்க்கலாம்.
    செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குலதெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம்.

    எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.

    ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய் - 9, நாட்டு வாழைப்பழகம் - 18, கொட்டைப்பாக்கு - 18, வெற்றிலை - 18, கதம்பப்பூ - ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.

    Next Story
    ×