search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சகல தோஷமும் போக்கும் சிங்கிரிகுடி நரசிம்மர்
    X

    சகல தோஷமும் போக்கும் சிங்கிரிகுடி நரசிம்மர்

    திருமண தடை, பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் உடனடியாக அவர்களது பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.
    இரண்யகசிபுவை வதம் செய்தது போலவே, உக்கிர தோற்றத்தில் இறைவன் காட்சியளிக்கும் இடங்களில் ஒன்றுதான் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில். மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் 4-வது அவதாரம்தான் நரசிங்கரின் தோற்றம்.

    பொதுவாக நரசிம்ம மூர்த்தியின் தோற்றம் சிங்கமுகத்தோடு இருப்பதால், பார்ப்பவர்களுக்கு அச்ச உணர்வு தோன்றலாம். ஆனால் அவர் பக்தர்களுக்கு கருணையை வாரி வழங்குபவர்.

    நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துகளை கொண்டு இந்தக் கோவில் விளங்குவதால், திருமணம் கைகூடும், வேலைவாய்ப்பு கடன் நிவர்த்தி உண்டாகும். பில்லி சூனியம் அண்டாது என்று கூறுகிறார்கள். நவக்கிரக பரிகாரம் போன்ற பிரார்த்தனைகள் நல்ல பலனைக் கொடுப்பதாகப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×