search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணத்தடை, புத்திரதோ‌ஷம் நீக்கும் கருப்பண்ணசாமி
    X

    திருமணத்தடை, புத்திரதோ‌ஷம் நீக்கும் கருப்பண்ணசாமி

    சிறைகாத்த அய்யனார் கோவிலில் உள்ள கருப்பண்ணசாமியை வழிபட்டால் திருமணத்தடை, புத்திரதோ‌ஷம் போன்ற அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.
    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சிறைகாத்த அய்யனார் கோவில். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். பூமியில் இருந்து தானாக, சுயம்புவாய் வெளிப்பட்ட இந்த அய்யனார் அபரிதமான சக்தி மிக்கவர்.

    இங்குள்ள கோவிலில் உள்ள கருப்பண்ணசாமி திருமணத்தடை, புத்திரதோ‌ஷம் ஆகியவற்றை போக்கும் ஆற்றல் படைத்தவர். இவரது சன்னிதியில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை துண்டு சீட்டில் எழுதி கட்டினால் 3 மாதத்திற்குள் அவை நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்பாளுக்கு 7, 9, 21 என்ற எண்ணிக்கையில் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறைகாத்த அய்யனாருக்கு அர்ச்சனை செய்தும், கருப்பண்ணசாமிக்கு பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    விநாயகர், ஸ்ரீவீரபத்திரசாமி, காமாட்சி அம்மன், பேச்சி அம்மன், சங்கிலி கருப்பண்ணசாமி, சப்த கன்னியர்கள், காட்டேரி அம்மன், ஞாலி சன்னாசி சித்தர், மாமுண்டீஸ்வரர், பெரியண்ணசாமி, காத்தவீரியன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. அய்யனார் உற்சவமூர்த்தி பூரணை, புஷ்பகலா ஆகிய 2 அம்பாள்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்ரஹாரம்  என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள ரவுண்டானா அருகில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம், திருவையாறு செல்லும் பஸ்சில் ஏறினால் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த கோவிலை அடையலாம்.
    Next Story
    ×