search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விடிவு காலம் பிறக்க விளக்கேற்றுங்கள்
    X

    விடிவு காலம் பிறக்க விளக்கேற்றுங்கள்

    விடிவு காலம் பிறக்க எந்த மாதங்களில் விளக்கேற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும், என்ன பிரச்சனைகள் தீரும் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.
    * சித்திரை மாத பவுர்ணமியன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தன தான்யம் பெருகும்.

    * வைகாசி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வ நிலை உயரும்.

    * ஆனி மாத பவுர்ணமிப் பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

    * ஆடி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

    * ஆவணி மாத பவுர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    * புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் நடைபெறும்.

    * ஐப்பசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் உணவு பஞ்சம் ஏற்படாது.

    * கார்த்திகை மாத பவுர்ணமி பொழுதில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் நிலைத்த புகழ் வந்து சேரும்.

    * மார்கழி மாத பவுர்ணமியன்று, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் ஆரோக்கியமான உடல்நிலை உருவாகும்.

    * தை மாத பவுர்ணமி தினத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

    * மாசி மாத பவுர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகன்று இன்பங்கள் பெருகும்.

    * பங்குனி மாத பவுர்ணமி அன்று வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
    Next Story
    ×