search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீராத நோய் தீர்க்கும் தன்வந்திரி
    X

    தீராத நோய் தீர்க்கும் தன்வந்திரி

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் உள்ள தன்வந்திரி பகவானை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக, ஸ்ரீமன் நாராயணனே இங்கு தன்வந்திரியாக திகழ்வதாக கூறப்படுகிறது.

    கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    பொதுவாக எல்லாச் சன்னிதிகளின் உச்சியிலும், விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதால், நோயாளிகள் பலரும் அவரிடம் வைத்தியம் பார்க்க வருவார்கள் என்பதால் ஆகம விதிகளின்படி இவரது சன்னிதிக்கு மேல் விமானம் கட்டப்படவில்லை.
    Next Story
    ×