search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணம் கைகூடும் வரம் அருளும் மாங்காடு அம்மன்
    X

    திருமணம் கைகூடும் வரம் அருளும் மாங்காடு அம்மன்

    திருமணம், குழந்தை செல்வம் போன்ற குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து மாங்காடு கோவிலுக்கு வந்து அம்மனை வழிபாடு செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விஷேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அம்பாள் மாங்காடு தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர். ஆண்களுக்கும் இது பொருந்தும்.

    குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும். பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    உத்தியோக உயர்வுக்காவும், உடல் சார்ந்த குறைகள் நீங்கவும் மாங்காடு தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
    Next Story
    ×