search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செவ்வாய் தோஷம் போக்கும் முருகன் வழிபாடு
    X

    செவ்வாய் தோஷம் போக்கும் முருகன் வழிபாடு

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அச்சமின்றி வாழ முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
    திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கின்ற போது அது செவ்வாய் ஜாதகமா? என்று சிலர் பார்ப்பர். பெண்ணிற்கு செவ்வாய் தோஷ ஜாதகம் என்றால், மாப்பிள்ளைக்கும் அதே போல் இருக்க வேண்டும். செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அச்சமின்றி வாழ முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். தோஷம் விலகி யோகம் சேரும்.

    அதற்குரிய விதத்தில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் சக்தி வழிபாட்டினை மேற்கொண்டு, அதன்பிறகு வரும் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    இடையில் வரும் ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவினையும் கண்டுமகிழ்ந்து, விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகைத் திருவிழாவும் வருகின்றது. அந்த நாளிலும் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். இப்படி முப்பெரும் வழிபாட்டை மேற்கொண்டால் அற்புத வாழ்வமையும்.
    Next Story
    ×