என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாவங்கள், தோஷங்களை நீக்கும் கடைமுக தீர்த்தவாரி
Byமாலை மலர்18 Nov 2016 3:54 AM GMT (Updated: 18 Nov 2016 3:55 AM GMT)
கடைமுக தீர்த்தவாரியில் புனித நீராடினால் மனிதர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.
நதிகளில் புனித நீராடினால் மனிதர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். இதன் மூலம் ஏற்பட்ட பாவங்கள், தோஷங்களால் நதிகள் தங்களது பொலிவை இழந்து தவித்தபோது அனைத்து நதிகளும் ஒன்று கூடி சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தன. நதிகளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பார்வதி தேவியுடன் நதிகளில் புனித நீராடினார். அதன் மூலம் நதிகளுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்கியதாகவும், அவ்வாறு சிவபெருமான் பார்வதி தேவியுடன் புனித நீராடும்போது நாமும் நீராடினால் நமது பாவங்களும், தோஷங்களும் நம்மை விட்டு அகலும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
அதன்படி காரைக்காலில் உள்ள அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த வாரி (துலா ஸ்நானம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்று, சாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காரைக்கால் அரசலாற்றங்கரையில் அமைந்துள்ள உஜ்ஜயினி காளியம்மன் கோவிலுக்கு பின்புறம் எழுந்தருளி, சாமி புனிதநீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்களும் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தோஷங்கள், பாவங்கள் விலக உங்கள் ஜாதகத்தில் பொருத்தமான நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் கடைமுக தீர்த்த வாரியில் நீராடுவது மிகவும் நல்லது.
அதன்படி காரைக்காலில் உள்ள அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த வாரி (துலா ஸ்நானம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்று, சாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காரைக்கால் அரசலாற்றங்கரையில் அமைந்துள்ள உஜ்ஜயினி காளியம்மன் கோவிலுக்கு பின்புறம் எழுந்தருளி, சாமி புனிதநீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்களும் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தோஷங்கள், பாவங்கள் விலக உங்கள் ஜாதகத்தில் பொருத்தமான நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் கடைமுக தீர்த்த வாரியில் நீராடுவது மிகவும் நல்லது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X