search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவங்கள், தோஷங்களை நீக்கும் கடைமுக தீர்த்தவாரி
    X

    பாவங்கள், தோஷங்களை நீக்கும் கடைமுக தீர்த்தவாரி

    கடைமுக தீர்த்தவாரியில் புனித நீராடினால் மனிதர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும் என்பது ஐதீகம்.
    நதிகளில் புனித நீராடினால் மனிதர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். இதன் மூலம் ஏற்பட்ட பாவங்கள், தோஷங்களால் நதிகள் தங்களது பொலிவை இழந்து தவித்தபோது அனைத்து நதிகளும் ஒன்று கூடி சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தன. நதிகளின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பார்வதி தேவியுடன் நதிகளில் புனித நீராடினார். அதன் மூலம் நதிகளுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்கியதாகவும், அவ்வாறு சிவபெருமான் பார்வதி தேவியுடன் புனித நீராடும்போது நாமும் நீராடினால் நமது பாவங்களும், தோஷங்களும் நம்மை விட்டு அகலும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

    அதன்படி காரைக்காலில் உள்ள அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்த வாரி (துலா ஸ்நானம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணிக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்று, சாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காரைக்கால் அரசலாற்றங்கரையில் அமைந்துள்ள உஜ்ஜயினி காளியம்மன் கோவிலுக்கு பின்புறம் எழுந்தருளி, சாமி புனிதநீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்களும் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    தோஷங்கள், பாவங்கள் விலக உங்கள் ஜாதகத்தில் பொருத்தமான நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் கடைமுக தீர்த்த வாரியில் நீராடுவது மிகவும் நல்லது.
    Next Story
    ×