search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீராத வினைகளை தீர்த்து வைக்கும் இருக்கன்குடி மாரியம்மன்
    X

    தீராத வினைகளை தீர்த்து வைக்கும் இருக்கன்குடி மாரியம்மன்

    இருக்கன்குடி மாரியம்மனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய், தீராத வயிற்று வலி, அம்மை நோய்கள் தீரும்.
    இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி அமைப்பிருக்கும். ஆனால் இருக்கன்குடி மாரியம்மனோ இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும் அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது என்ப தற்கேற்ப வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டிருக்கின்றார். 

    இந்த அமைப்பு இருக்கன்குடி மாரியம்மனின் சிறப்பு அம்சமாகும். இருக்கன்குடி மாரியம்மனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய், தீராத வயிற்று வலி, அம்மை நோய்கள் தீரும். கோரிக்கைகள் நிறைவேறியதும், நோய் தீர்ந்தவுடனும் அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தும், மாவிளக்கு ஏந்தியும், அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்தலாம். 

    செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களின் தரிசன வசதிக் காக காலை நடை திறப்பு முதல் இரவு பூஜை முடியும் வரை தொடர்ந்து சன்னதி நடைதிறந்து இருக்கும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. 
    Next Story
    ×