search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்.
    • குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது.

    குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது. குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை ஆகும். குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்லலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

     வலிதாயநாதர் கோவில்:

    சென்னை, பாடியில் உள்ள வலிதாயநாதர் கோவில் குருபெயர்ச்சி தினத்தில் சென்று வழிபட வேண்டிய கோவில் ஆகும். பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது ஆகும். இந்த கோவில் குருபகவான் வழிபட்ட தலம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இந்த தலமானது குருபகவானுக்கு மிகச்சிறந்த பரிகார தலம் என்று புராணங்கள் கூறுகிறது.

     தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோவில்:

    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில். இந்த கோயிலில் தேவாரம் பாடல் பாடப்பெற்றுள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரராக காட்சி சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் இந்த கோலத்தில், இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்ற கோலத்தில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தருகிறார். தோஷங்கள் நீங்க இந்த கோயிலில் உள்ள மங்காம்பிகை - சமேத வசிஷ்டேஸ்வரருடன் காட்சி தரும் குருபகவானை வணங்கினால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     திருவாரூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மிகச்சிறந்த குரு பரிகாரத் தலம் ஆகும். இங்கு தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் காட்சி தருகிறார். குருபகவான் தனது சீடர்களுக்கு 24 அட்சரங் மந்திரத்தை உபதேசித்த காரணத்தால், இங்கு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில், குருபகவானுக்கு மஞ்சள் நிற பட்டுடுத்தி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சிறப்பு என்று கூறப்படுகிறது.

     மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்:

    மயிலாடுதுறையில் உள்ள அமைந்துள்ளது மயூரநாதர் கோவில். இந்த கோவில் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். காசிக்கு நிகரான இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.

     காரைக்குடி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் அமைந்துள்ளது. இங்கு குரு வடிவத்தில் சிவ பெருமான் தோன்றி கார்த்திகை பெண்களின் சாபத்தை நீக்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியையும், அந்த கோயிலுக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் வழிபட்டு 12 முறை வலம் வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி:

    நவ திருப்பதிகளில் ஒன்றாக ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோவில் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. நம்மாழ்வார் அவதரித்த இந்த கோயிலில் குருவாக ஆதிநாத பெருமாள் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

     திருச்செந்தூர் முருகன் கோவில்:

    அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குரு பகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். முருகப்பெருமானை வணங்கி இவரையும் வணங்குவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிட்டும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை ஆகும்.

     வல்லநாடு கைலாச நாதர் கோவில்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லநாடு. இங்குள்ள முறப்பநாட்டில் இந்த கோவில் உள்ளது. நவ கைலாயங்களில் ஒன்றான இந்த கோயிலில், குருவின் அம்சமாக கைலாச நாதர் உள்ளார். இவரை வணங்குவதால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

    மேலே கூறிய கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைப்பிடி அளவு சாதம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் ஏராளம்.
    • சாப்பாட்டை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது.

    இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

    நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், பணம் கட்டாயம் தேவைதான். இருப்பினும் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களையும் முக்கியத்துவம் கொடுத்து மதிக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக, தேவைக்கு அதிகமாக உணவு பண்டங்களை வாங்கி வைத்து வீணாக்க கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில் ஒரு வேளைக்கு, ஒரு கைப்பிடி அளவு சாதம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் ஏராளம்.

    ஆனால் அந்த சாதத்தை, அந்த அரிசி நம்மிடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தேவைக்கு அதிகமாக சமைத்து அதை கீழே கொட்டுவது என்பது மிகப்பெரிய தவறு. நீங்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, உங்களிடம் பணம் காசு நிறைய இருந்தாலும் சரி, சாப்பிடும் சாப்பாட்டை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.

    நாம் இன்றைக்கு செய்யக்கூடிய தவறு, ஒரு பருக்கை அரிசி என்பது, ஒருநாளைக்கு நம்முடைய வீட்டில் பஞ்சத்தை ஏற்படுத்த ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது அல்லவா? சரி, நம்முடைய வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்கக்கூடாது என்றால், அரிசியை நாம் எப்படி நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த காலத்தில் உணவு சம்பந்தப்பட்ட நெல் அரிசி கம்பு கேழ்வரகு கோதுமை இப்படிப்பட்ட தானியங்களை எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட குதிர் என்று சொல்லப்படும் பெரிய அளவிலான ஒரு மண்பானையில் தான் வீட்டில் வைத்து பாதுகாத்து, சேமித்து வந்தனர். காசு பணம் குறைவாக இருந்தாலும் அப்போது நம்முடைய வாழ்க்கை நிறைவாக இருந்தது.

    இன்றைய கால சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், மாற்றங்களினால் நமக்கு கிடைக்கக்கூடிய பல நல்ல பலன்களில், சில கெடுதல்களும் சேர்ந்தே தான் இருக்கின்றது.

    அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் உங்களது சமையலுக்கு பயன்படுத்தி வரும் அரிசியை உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் சில்வர் பாத்திரத்தில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் கவரில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, அல்லது அரிசி மூட்டையாக வைத்து இருந்தாலும் சரி, அதன் உள்ளே எப்போதுமே ஒரு சிறிய மண்பானையை வைத்து, அந்த மண் பானை நிரம்ப அரிசியை வைக்க வேண்டும்.

    மண் டம்ளர் இருந்தால் கூட போதும். இப்போதெல்லாம் மண் டம்ளர்கள் கிடைக்கின்றது. அதை வாங்கி அரிசியை அளக்க ஆழாக்காக பயன்படுத்தினாலும், அது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

    உங்கள் வீட்டு அரிசி டப்பாவில், அரிசி மூட்டையில் அரிசி தீர்ந்து போனாலும் எப்போதும் இந்த சிறிய மண் குடுவையில் அரிசி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் நிச்சயம் பல நல்ல மாற்றங்களை உங்களுக்கு இந்த ஒரு சிறிய பரிகாரம் தேடித் தரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

    ஒரு மண் பானையை வைத்து விட்டால் நம்முடைய வாழ்க்கையில், கஷ்ட நஷ்டங்கள் மாறிவிடுமோ என்ற கேள்விகளை எழுப்பும் சிலரும் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.

    கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்து வைத்திருந்தும், தன்னுடைய வீட்டில் மூட்டை மூட்டையாக அரிசியை அடுக்கி வைத்து இருந்தும் ஒரு வாய் சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியாதவர்களும் இந்த பூலோகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பிடி அளவு அரிசியை காசுகொடுத்து வாங்க முடியாமல் பசியால் வாடுபவர்களும் இந்த உலகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

    அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு ஆண்டவன் உங்களுக்கு சக்தியை கொடுத்து இருக்கின்றாரா? மண்பானையில் வைத்திருக்கும் அந்த அரிசியோடு சேர்த்து, உங்களால் முடிந்த அரிசியை வாங்க இயலாதவர்களுக்கு, இயன்ற போது தானம் கொடுத்து வரும் பட்சத்தில், உங்களுக்கும் உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும், அரிசி வாங்க கூட காசு இல்லை என்ற கஷ்டம் வராது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும்.
    • நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    விரதங்கள் ஏராளமாக இருக்கின்றன. வார விரதம், தினசரி விரதம், மாத விரதம், திதி விரதம், வருட விரதங்கள், சிறப்பு விரதங்கள், பிரதோஷ விரதம், நட்சத்திர விரதங்கள் என பல வகை உண்டு. ஒவ்வொரு விரதங்களும் ஒவ்வொரு வகையான பலன்களை வழங்கும். விரதங்களின் மூலம் வாழ்வை மட்டுமல்ல, உடலையும் நலமாக்கிக் கொள்ள இயலும். நம்பிக்கையோடு விரதத்தை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஜாதக ரீதியாக நமக்கு யோக பலன் தரும் கிரகம் எது என்று அறிந்து, அதற்குரிய நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் பார்த்து விரதம் இருக்க வேண்டும். விரதம் இருக்கும் நாளில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நற்பலன் கிடைக்கும். தோஷங்கள் அனைத்தும் மாறி சந்தோஷங்கள் நம்மை நாடி வரும்.

    நவக்கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் அமைந்தால் வாழ்க்கை சக்கரம் சீராக சுழல முடியும். ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு அமைப்பில் அமைந்திருக்கும். எந்த கிரகம் பலமிழந்து இருக்கின்றதோ அந்த கிரகத்தை பலப்படுத்துவதற்குரிய வழிபாடுகள். விரதங்களை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும்.

    பொதுவாக வாரத்தின் ஏழு நாட்களில் எந்த கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை அறிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    சூரியன் அருள்பெற விரும்புபவர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஆதிவார விரதம்' இருப்பது நல்லது. சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்து சூரிய வழிபாட்டோடு சிவனையும் வழிபடுங்கள். கோதுமை தானம் செய்வது நல்லது.

    சந்திர பலம் வேண்டுபவர்கள் சந்திர பகவானின் அருளைப் பெற திங்கட்கிழமை அன்று விரதம் இருப்பது நல்லது. அன்றைய தினம் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு ஒரு சிலருக்காவது அரிசி தானம் செய்யலாம்.

    செவ்வாய் என்னும் அங்காரகன் அருளைப்பெற விரும்புபவர்கள், ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டு துவரை தானம் செய்வது நல்லது.

    புதனின் அருளைப்பெற விரும்புபவர்கள், கல்விஞானம் பெற விரும்புபவர்கள், புதன்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு வருவதுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறந்தது. பாசிப்பயிறு தானம் செய்வது நல்லது.

    'குரு பார்க்க கோடி நன்மை' என்பதால் குருவின் அருளைப் பெற விரும்புபவர்கள், வியாழக்கிழமை விரதம் இருந்து முல்லைப்பூ மாலை அணிவித்து குருவை வழிபட்டு, சுண்டல் தானம் கொடுப்பது நல்லது.

    சுக்ரன் அருளைப் பெற விரும்புபவர்கள் வெள்ளிக் கிழமை விரதம் இருந்து, மாலை நேரத்தில் சிவாலயத்திற்குச் சென்று வெண் தாமரை பூ மாலை அணி வித்து லட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. அன்றைய தினம் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது. மொச்சை தானம் செய்யலாம்.

    சனி பகவானின் அருளைப்பெற விரும்புபவர்கள், சனிக்கிழமை அன்று விரதமிருந்து எள்தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நல்லது. திசை மாறிய தெய்வ வழிபாடு மிகவும் நற்பலனை வழங்கும். எள்ளோதரை நைவேத்தியம் அல்லது எள் தானம் செய்யலாம்.

    ராகுவின் அருளைப்பெற விரும்புபவர்கள். செவ்வாய்க்கிழமை தோறும் வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.

    கேது வின் அருளைப்பெற விரும்புபவர்கள், கேது இருக்கும் இடத்திற்குரிய நாளில் விநாயகப் பெருமானை முறையாக வழிபட்டு வருவது நல்லது. ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு தானம் செய்வது சிறந்தது.

    ஒவ்வொரு வாரத்திலும் அந்தந்த கிரகத்திற்குரிய கிழமையில் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற நற்பலன் தரும் கிரகத்திற்குரிய கிழமையில் விரதம் இருப்பதால் குடும்ப முன்னேற்றமும், செல்வச்செழிப்பும், செல்வாக்கும் உயரும். வாழ்வில் வளம் காண இந்த விரதங்கள் உறுதுணையாக அமையும்.

    எந்த விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் முதன் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு விரதத்தை தொடங்குவது நல்லது. விநாயகர் வழிபாடு வெற்றியை வழங்கும். பொதுவாக அனைவரும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் அகலும்.

    • பரிகாரம் செய்ய சொன்னாங்க செஞ்சேன் ஏதும் நடக்கல.
    • பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி.

    ஜோதிடர் சொன்ன "எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம்… ஒன்னும் பிரயோஜனம் இல்லை. எதுவும் நடக்கலே.. பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது.

    பரிகாரம் செய்ய சொன்னாங்க செஞ்சேன் ஏதும் நடக்கல எடைக்கு எடை காணிக்கை தர சொன்னாங்க அப்படியும் ஏதும் நடக்கல.. என்று புலம்புகிறார்கள்... பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கதை.

    பரிகாரம் தொடர்பான குட்டி கதை...

    ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார். நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் சூழத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப்பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

    அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து `ஐயோ… அம்மா' என்ற குரல் கேட்டது. ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான். அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

    `இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே' என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, `இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர். கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.

    "இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்" என்று மன்னனிடம் கூறினார்கள். மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, "என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்…."

    தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான் அரசன். அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

    அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான். தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.

    பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான். "மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன். நான் தண்டிக்கப் படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன்.

    நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.

    அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்.." என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.

    உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர். அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

    சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்… "ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற் காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?

    நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே? நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?

    "ஐய்யய்யோ'' அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே எல்லாரும் வெடவெடத்து போனார்கள். விறகுவெட்டி தொடர்ந்தான்…

    "நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன். அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்.

    மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.

    அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால் என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.

    மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது. எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்" என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி. ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா? இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.

    இந்த கதை கூறும் நீதி...

    அந்த மன்னன் தான் நாம். நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை. அந்த விறகுவெட்டி தான் இறைவன். இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.

    பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்தால் போச்சு என்று ஆணவத்தால் பணத்தாலோ, ஆடம்பர யாகங்களாலோ, ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி, அர்ச்சகரையோ, அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம், ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க கூட வைக்க முடியாது.

    ஆனால், இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று, ஆண்டவா, மனதுக்குள் வேறு எந்த சிந்தனையுமின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து, அறியாமல் நடந்த தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இதுபோல் நிகழாவண்ணம் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஒரு முறை மன்னித்து விடு! என உளமுருகி மன்றாடி கேளுங்கள். ஆண்டவன் முன் நீங்கள் கண் மூடி மனம் வருந்தி வேண்டும் போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான். கருணை புரிவான். இப்படி செய்யும் பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.

    • தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பக்தர்கள் யாரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி 23-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதற்காக இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான ஆன்லைன் முகவரி மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

    தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிட்டனர்.

    இதனை தொடர்ந்து ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கான 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட உள்ளனர்.

    இதனை பெற்றுக்கொண்ட பக்தர்களும், ரூ.300 டிக்கெட் வாங்கிய பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    மேலும், இன்று மாலை 5 மணிக்கு 10 நாட்கள் திருமலையில் தங்கும் விடுதிகளுக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

    தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பக்தர்கள் யாரும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 56, 723 பேர் தரிசனம் செய்தனர். 21,778 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 5 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி திசனம் செய்தனர்.

    • போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
    • சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் போது அங்கு கூடிய கூட்டத்தினர், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆவணங்களை பறித்து சென்றதாக தி.மு.க.வினர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    அவர்களுக்கு ஜாமின் அளித்தும், சிலருக்கு முன்ஜாமின் அளித்தும் கரூர் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. இந்த ஜாமின், முன்ஜாமினை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து, அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆஜரானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    தற்போது அவர்களில் ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் கோர்ட்டு மீண்டும் ஜாமின் அளித்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அந்த ஜாமினை ரத்து செய்யக்கோரியும் வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
    • கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

    சந்தன தைலம்- சுகம் தரும்

    திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

    பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

    அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

    நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

    வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

    பால் - மனக்கவலை தீரும்

    தயிர் - மனநோய் அகலும்

    தண்ணீர்- சாந்தி உண்டாகும்

    நெய் - தொழில் சிறக்கும்

    தேன் - குரல் இனிமை பெறும்

    வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

    கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

    இளநீர் - பக்தி பெருகும்

    எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

    சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

    திருநீறு - துன்பம் நீங்கும்

    சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

    நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

    பழவகை - திருவருள் பெறலாம்

    வாழைப்பழம் - வறுமை ஒழியும்

    கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

    எள் - சனி பயம் நீங்கும்

    மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

    பூ மாலை- உடல் பிணி தீரும்

    பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

    பச்சரிசி- தீராக்கடன் தீரும்

    மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

    தேங்காய்- பொன்பொருள் சேரும்

    பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

    கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

    முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

    ஏலம்- தீமைகள் நீங்கும்

    உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

    எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

    எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

    எள்ளு சாதம் - பகை நீங்கும்

    பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

    கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்

    • வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோதனைகளை வென்றால் தான் சாதனை படைக்க முடியும்.
    • நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    இந்தப் பூவை சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால், தடைபட்ட காரியமானது 11 வாரங்களில் வெற்றி அடையும்.

    எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அந்த காரியமானது எடுத்த முதல் மார்க்கத்திலேயே வெற்றி அடைந்துவிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் எந்த ஒரு செயல்பாடும் தொடங்கிய மார்க்கத்திலேயே வெற்றி அடைந்து விடும் என்ற எண்ணத்தை நமக்குள் வளர வைக்கக்கூடாது .

    தோல்வி என்ற கசப்பை சுவைக்கும் போது தான், வெற்றி என்ற இனிப்பு நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .

    இறைவன் சில சமயங்களில் நம்முடைய மனவலிமையை சோதித்துப் பார்ப்பதற்காக கூட நமக்கு தோல்வியை தரலாம். தோல்வியைக் கண்டு அஞ்சாமல் எவன் இருக்கிறானோ, அவனுக்கு தான் வெற்றியை தர வேண்டும் என்று கூட அந்த இறைவன் நினைத்திருக்கலாம். ஆகவே, தோல்வியை கண்டு பயப்படாமல் எவரொருவர், வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றாரோ அவர் தான் வாழ்க்கையில் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நமக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோதனைகளை வென்றால் தான் சாதனை படைக்க முடியும்.

    உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட கஷ்டமாக இருந்தாலும், நஷ்டமாக இருந்தாலும் அல்லது வேறு வகையில் உங்கள் வாழ்க்கையை முன்னேற விடாமல் இருக்கும் எந்த தடையாக இருந்தாலும் அதனை வெற்றியடையச் செய்ய எந்த பூவை சிவபெருமானுக்கும் சூட்டினால் வெற்றி அடையலாம் என்பதை பற்றியும், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் குறிப்பிட்ட இந்த ஒரு பூவை முருகப்பெருமானுக்கு சாத்தினால் நல்ல பலனை அடையலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    எல்லோருக்கும் வெற்றியை தேடித்தரும் அந்த பூ செண்பகப்பூ. சிவபெருமானுக்கு எந்த தினத்தில் வேண்டும் என்றாலும் இந்தப் பூவை வைத்து பூஜை செய்யலாம். அது நமக்கு நல்ல பலனை தேடித்தரும். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த இந்த செண்பகப்பூவால் அர்ச்சனை செய்து மனதார உங்களது வேண்டுதல்களை வைத்துப் பாருங்கள். 11 வாரங்களில் அதற்கான பலனை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.

    இதைப்போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூவினை முருகப்பெருமானுக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் முருகனுக்கு இந்தப்பூவை அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மட்டும்தான் இந்த செண்பகப் பூவை, முருகப்பெருமானுக்கு சாத்தி வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் மனதில் இருக்கும் எந்த வேண்டுதல்களை வைத்து வேண்டினாலும் அதற்கான பலன் கட்டாயம் கிட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .

    எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்தப் பூவை வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டம் தீர்ந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்தப் செண்பகப் பூ வானது கடைகளில் கிடைப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். இருப்பினும் உங்களுக்கு தெரிந்த பூ கடைக்காரர்களிடம் சொல்லி வைத்தால் கட்டாயம் கொண்டு வந்து தருவார்கள்.

    • கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
    • எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதில் எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:

    2 விளக்கு- குடும்பம் மேன்மைபெறும்.

    3 விளக்கு- எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

    4 விளக்கு- நற்கல்வி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

    5 விளக்கு- விநாயகர் அருள் கிடைக்கும்.

    6 விளக்கு- நோய்கள் குணமாகும்.

    7 விளக்கு- திருமணத்தடை நீங்கும்.

    8 விளக்கு- மாங்கல்ய பலம் கூடும்.

    9 விளக்கு- நவக்கிரக பிணிகள் நொடியில் அகலும்.

    10 விளக்கு- தொழில் மேன்மை பெறும். கடன் தொல்லைகள் அகலும்.

    11 விளக்கு- செய்தொழிலில் லாபம் கிட்டும். போட்டியில் வெற்றி வசப்படும்.

    12 விளக்கு- ஜென்மராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

    13 விளக்கு- பில்லிசூனியபாவம் விலகும்.

    14 விளக்கு- குலதெய்வபலம், சந்தான பலன் கிடைக்கும்.

    15 விளக்கு- வழக்கில் வெற்றி வசப்படும்.

    16 விளக்கு- வாழ்வில் 16 செல்வங்களும் கிட்டும்.

    17 விளக்கு- வாகனம், வண்டி யோகம் கிடைக்கும்.

    27 விளக்கு- நட்சத்திர தோஷம் நீங்கும்.

    48 விளக்கு- தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 விளக்கு- நினைத்த காரியம் நடக்கும்.

    508 விளக்கு- தீராத திருமண தோஷங்கள் அகலும்.

    1008 விளக்கு- சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

    • சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர்.
    • துர்க்கை வழிபாடு என்பது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது.

    துர்க்கை வழிபாடு என்பது தற்பொழுது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது. ஆனால் கோனியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் ராகு காலத்தில் ஆதிகோனியம்மன் சன்னதிக்கு பக்கத்தில் உள்ள மேடையில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு வைத்து வழிபடுவர்.

    திருமண தடைகள், காரிய தடைகள், தொழிலில் நஷ்டம், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் நோய் தீர்க்க வேண்டியும் 48 வாரம், 18 வாரம், 9 வாரம் போன்ற கணக்குகள் வைத்து துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.

    அவர்கள் நினைத்த வாரம் வரை வந்து விட்டால் இறுதி யில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், திருமண தடைகளுக்காக வேண்டியவர் அம்மனுக்கு பொட்டு மாங்கல்யம் செய்து அம்மன் கழுத்தில் அணிவித்து அதை காணிக்கையாக செலுத்துவர்.

    உடல்நிலை சரியில்லாத வர்கள் வெள்ளியாலேயோ அல்லது அதுபோன்ற வேறு உலோகத்தாலேயோ செய்யப்பட்ட கண்ணடக்கம், கை, கால் போன்றவை வாங்கி பூஜை செய்துபின் அதை காணிக்கையாக செலுத்துவர்.

    சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர். காரியத்தடை ஏற்படுபவர்கள் பல தானங்களை செய்கின்றனர். இவ்வாறு செய்வதனால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த வேண்டுதல் உள்ளூர் மக்கள் மட்டும் வேண்டுவது இல்லை. வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பம்பாய், கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து வேண்டுதல் செய்கின்றனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கோனியம்மனுக்கு தீவிர பக்தர்கள் உண்டு. அவர்கள் வேண்டுதலுக்கு காணிக்கைகளை அஞ்சலில் அனுப்புவதும் உண்டு.

    • ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
    • இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடினால் வியாதிகள் குணமாகும்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சுகந்த பரிமளேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அன்னை சக்தி இங்கு 'பெரியநாயகி' என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்- பெரியநாயகி அம்பாளை மனமுருகி வேண்டினால், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதேபோல் நாக தோஷம், புத்திர தோஷம் மற்றும் ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.

    தீராத வியாதி உள்ளவர்கள், இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடி, மண்டபத்தில் தங்கி சுவாமியையும்-அம்பாளையும் வழிபட்டால் வியாதிகள் குணமாகி பூரண நலமுடன் திரும்புவார்கள்.

    • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர்.
    • இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர். இந்த திருத்தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.

    இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.

    ×