என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்21 Sep 2017 2:40 AM GMT (Updated: 21 Sep 2017 2:40 AM GMT)
நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளான நாளை மாலை 6 மணிக்கு செபமாலை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அருட்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமையில் திருக்கொடியேற்றமும், திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, அருட்தந்தை ஸ்டேன்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இதில், கார்மல் நகர் மண்டல அருட்தந்தையர்கள் கலந்துகொள்கிறார்கள். இரவு 9 மணிக்கு சிறப்பு கூட்டமும், கலைஇரவும் நடக்கிறது.
இதுபோல், விழாவின் ஒவ்வொரு நாள் மாலை 6 மணிக்கும் செபமாலை, திருக்குடும்ப நவநாள், விழா திருப்பலி நடைபெறுகிறது.
3-ம் நாள் விழாவில் காலை 7.30 மணிமுதல் மாலை 4 மணி வரை அருட்தந்தை ஹென்றி தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.
6-ம் நாள் விழாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை மற்றும் விழா திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையேற்று மறையுரை நிகழ்த்துகிறார்.
9-ம் நாள் விழாவில், காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்தந்தை மரிய வில்லியம் தலைமைதாங்குகிறார். தொடர்ந்து அருட்தந்தை ஆல்வின் மதன்ராஜ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு செபமாலை மற்றும் ஆராதனை விழாவுக்கு பேரருட்தந்தை சாலமோன் தலைமைதாங்குகிறார். அருட்தந்தை ஆன்றனி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
10-ம்நாள் விழா காலை 7 மணிக்கு பேரருட்தந்தை மைக்கேல் ஏஞ்சலுஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்தந்தை வலேரியன் மறையுரையாற்றுகிறார். அதைதொடர்ந்து மாலை 3.30 மணிக்கு தேர்ப்பவனியும், 6.30 மணிக்கு தேர் திருப்பலியும் நடக்கிறது. தேர்திருப்பலிக்கு அருட்தந்தை மார்க்கோணி ரவிச்சந்திரன் தலைமைதாங்குகிறார். அருட்தந்தை சகாய பிரபு மறையுரையாற்றுகிறார்.
இரவு 9 மணிக்கு சிறப்பு கூட்டமும், கலைஇரவும் நடக்கிறது. வருகிற 2-ந்தேதி காலையில் நடைபெறும் திருப்பலிக்கு பின் திருக்கொடியிறக்கம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறைமக்கள், ஊர் நிர்வாகத்தினர், தூய அன்னாள் பிறரன்பு அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
விழாவின் முதல் நாளான நாளை மாலை 6 மணிக்கு செபமாலை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அருட்தந்தை பேட்ரிக் சேவியர் தலைமையில் திருக்கொடியேற்றமும், திருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, அருட்தந்தை ஸ்டேன்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இதில், கார்மல் நகர் மண்டல அருட்தந்தையர்கள் கலந்துகொள்கிறார்கள். இரவு 9 மணிக்கு சிறப்பு கூட்டமும், கலைஇரவும் நடக்கிறது.
இதுபோல், விழாவின் ஒவ்வொரு நாள் மாலை 6 மணிக்கும் செபமாலை, திருக்குடும்ப நவநாள், விழா திருப்பலி நடைபெறுகிறது.
3-ம் நாள் விழாவில் காலை 7.30 மணிமுதல் மாலை 4 மணி வரை அருட்தந்தை ஹென்றி தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.
6-ம் நாள் விழாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை மற்றும் விழா திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையேற்று மறையுரை நிகழ்த்துகிறார்.
9-ம் நாள் விழாவில், காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்தந்தை மரிய வில்லியம் தலைமைதாங்குகிறார். தொடர்ந்து அருட்தந்தை ஆல்வின் மதன்ராஜ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு செபமாலை மற்றும் ஆராதனை விழாவுக்கு பேரருட்தந்தை சாலமோன் தலைமைதாங்குகிறார். அருட்தந்தை ஆன்றனி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
10-ம்நாள் விழா காலை 7 மணிக்கு பேரருட்தந்தை மைக்கேல் ஏஞ்சலுஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்தந்தை வலேரியன் மறையுரையாற்றுகிறார். அதைதொடர்ந்து மாலை 3.30 மணிக்கு தேர்ப்பவனியும், 6.30 மணிக்கு தேர் திருப்பலியும் நடக்கிறது. தேர்திருப்பலிக்கு அருட்தந்தை மார்க்கோணி ரவிச்சந்திரன் தலைமைதாங்குகிறார். அருட்தந்தை சகாய பிரபு மறையுரையாற்றுகிறார்.
இரவு 9 மணிக்கு சிறப்பு கூட்டமும், கலைஇரவும் நடக்கிறது. வருகிற 2-ந்தேதி காலையில் நடைபெறும் திருப்பலிக்கு பின் திருக்கொடியிறக்கம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறைமக்கள், ஊர் நிர்வாகத்தினர், தூய அன்னாள் பிறரன்பு அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X