search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் விழா கொடி இறக்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் விழா கொடி இறக்கப்பட்ட போது எடுத்த படம்.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவு

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டும் தோறும் அன்னை மரியாவின் பிறந்தநாள் விழா ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் தினமும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.

    விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், துணை அதிபர் சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்கு தந்தைகள் டேவிட்தனராஜ், ஆரோன், ஆண்டோஜேசுராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் தாமஸ் ஆல்வாஎடிசன், ஜூலியட் அற்புதராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குருராஜ், வேளாங்கண்ணி அ.தி.மு.க. நகர செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×