search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள்
    X

    சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள்

    சிலுவைப் பாதை என்பது இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும்.
    சிலுவைப் பாதை (Stations of the Cross) என்பது இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும். இந்த வழிபாட்டுச் செயல் கத்தோலிக்கக் கிறித்தவரிடையே பரவலாக உள்ளது.

    லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபையாரிடையே இப்பழக்கம் அதிகமாக இல்லை. அசிசி நகர் தூய பிரான்சிசு என்பவர் காலம் தொடங்கி (1181/1182-1226) சிலுவைப் பாதை கிறித்தவ கோவில்களில் நடைபெற்று வருகிறது. தவக் காலத்தின் போதும், குறிப்பாக பெரிய வெள்ளிக் கிழமையன்றும் கிறித்தவர்கள் சிலுவைப் பாதை கொண்டாடுகிறார்கள்.

    சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள்

    1. இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது
    2. இயேசுவின்மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்
    3. இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
    4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார்
    5. சிரேன் ஊர் சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவுகிறார்
    6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத் துணியால் துடைக்கிறார்
    7. இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
    8. இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்திக்கிறார்
    9. இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
    10. இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்
    11. இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
    12. இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்
    13. இயேசுவின் திருவுடலைச் சிலுவையிலிருந்து இறக்குகிறார்கள்
    14. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்

    மேற்கூறிய பதினான்கு நிலைகளோடு இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைப் பதினைந்தாம் நிலையாகச் சேர்ப்பது இன்றைய வழக்கம்.

    தூய ஆவி என்பது கிறித்துவத்தில் கடவுளின் ஆவி எனவும், கடவுளின் சாரம் எனவும் பொருள்படும். தம திரித்துவக் கொள்கையையுடைய கிறித்துவ உட்பிரிவிகளின் படி, ஒரே கடவுள் மூன்று ஆள்களாயிருக்கிறார். முதலாமவர் தந்தை. இரண்டாமவர் மகன் (இயேசு). மூன்றாமவர் தூய ஆவியார். இவர் பிதாவோடும் மகனோடும் ஒரே கடவுளாக இருப்பவர். இவர் உலகையும், திருச்சபையையும் இன்றும் புதுப்பித்துக்கொண்டு வருகிறார் என கிறித்துவர்களால் நம்பப்படுகிறது.
    Next Story
    ×