search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பங்கு குடும்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை காலை 6.30 மணிக்கு ஆலய அடித்தள விரிவாக்கம் மந்திரிப்பு, திருப்பலி மற்றும் ஆலய முன்வாயில் நிலை இடுதல் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கு ஆலய பங்குத்தந்தை கே.மரியதாஸ் தலைமை தாங்குகிறார். மாலை 6 மணிக்கு செபமாலை நடக்கிறது. 6.30 மணிக்கு பங்கு தந்தைக்கு ஊர் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 6.45 மணிக்கு கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடக்கிறது.

    இதற்கு மறைமாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் அடிகளார் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணியாளர்கள் ராயன், இயேசுதாசன் தாமஸ், சகாய ஆனந்த், ஜோசப் காலின்ஸ் மற்றும் அருட்பணியாளர்கள் பேட்ரிக்சேவியர், கபிரியேல் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8.30 மணிக்கு ஆண்டு விழா, பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தினமும் காலை திருப்பலி, மாலை செபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 11-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு நடக்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை, திருப்பலிக்கு அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்க, அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் அருளுரை ஆற்றுகிறார். 12-ந்தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி, அருளுரை ஆற்றுகிறார்.

    12-ந்தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை, மாலை ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் தார்சியுஸ் ராஜ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ரசல்ராஜ் அருளுரை ஆற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி ஆகியவை நடைபெறுகிறது. 13-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் ஆடம்பர கூட்டு திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, அருளுரை ஆற்றுகிறார். பகல் 3 மணிக்கு அன்னையின் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு கொடி இறக்கமும், 8 மணிக்கு ஆண்டு விழா பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு அருட்பணி பேரவை, பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×