என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய தேர் பவனி 4-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்1 Aug 2017 4:17 AM GMT (Updated: 1 Aug 2017 4:17 AM GMT)
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா தேர்ப்பவனி வருகிற 4-ந்தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். 132-வது ஆண்டு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடைபெற்றது.
மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடக்கிறது.
8-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலையில் வடக்கன்குளம் மறை வட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில் நற்கருணை பவனியும், மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்குகிறார்.
இரவு மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில் சாகச நிகழ்ச்சியும், மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேர் பவனியும், தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடக்கிறது. 5-ந்தேதி கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜாண்சன்ராஜ் உதவி பங்கு தந்தை கிங்ஸ்டன், தர்மகர்த்தா ஆனந்தராஜா மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.
மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடக்கிறது.
8-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலையில் வடக்கன்குளம் மறை வட்ட முதன்மை குரு ததேயுஸ் ராஜன் தலைமையில் நற்கருணை பவனியும், மறையுரை நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மறையுரை வழங்குகிறார்.
இரவு மும்பை களிகை சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வன் தலைமையில் சாகச நிகழ்ச்சியும், மேஜிக் ஷோ நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி இரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தேர் பவனியும், தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடக்கிறது. 5-ந்தேதி கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜாண்சன்ராஜ் உதவி பங்கு தந்தை கிங்ஸ்டன், தர்மகர்த்தா ஆனந்தராஜா மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X