என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சின்னமலை ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித தோமையார் திருவிழா இன்று தொடக்கம்
Byமாலை மலர்23 Jun 2017 5:25 AM GMT (Updated: 23 Jun 2017 5:25 AM GMT)
சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித தோமையார் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித தோமையார் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு கொடி ஏற்றம், தேர்பவனி, நவநாள் திருப்பலி பாதிரியார் அந்தோணி செபாஸ்டின் தலைமையில் நடக்கிறது.
அதேபோல், ஒவ்வொரு நாளும் காலை 6 மணி, 11.30 மணி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆராதனையும், திருப்பலியும் நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் ஆடம்பர திருப்பலியும், தேர்பவனியும் நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 3-ந்தேதி அன்று தோமையார் பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு நற்கருணை ஆராதனை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை பாதிரியார் பி.ஜே.லாரன்ஸ் ராஜ், உதவி பங்கு தந்தை பாதிரியார் ஜஸ்டின் திரவியம், பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
அதேபோல், ஒவ்வொரு நாளும் காலை 6 மணி, 11.30 மணி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆராதனையும், திருப்பலியும் நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் ஆடம்பர திருப்பலியும், தேர்பவனியும் நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 3-ந்தேதி அன்று தோமையார் பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு நற்கருணை ஆராதனை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை பாதிரியார் பி.ஜே.லாரன்ஸ் ராஜ், உதவி பங்கு தந்தை பாதிரியார் ஜஸ்டின் திரவியம், பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X