search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் திருஇருதய ஆலய விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    இயேசுவின் திருஇருதய ஆலய விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    நாகர்கோவில் வேப்பமூடு அருகே அசிசி வளாகத்தில் உள்ள இயேசுவின் திருஇருதய ஆலய விழா நாளை தொடங்கி 25-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வேப்பமூடு அருகே அசிசி வளாகத்தில் உள்ள இயேசுவின் திருஇருதய ஆலய குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு செபமாலை, இயேசுவின் திருஇருதய புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. இவற்றுக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    17-ந்தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜான்குழந்தை மறையுரையாற்றுகிறார். 18-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் நித்திய சகாயம் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் இவாஞ்சலின் பெஸ்கி மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. 20-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பக்தசபை ஆண்டு விழா நடக்கிறது.



    23-ந்தேதி காலை 11 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குருகுலமுதல்வர் சாலமன் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    24-ந்தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் மைக்கல் ஏஞ்சலஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆனந்த் மறையுரையாற்றுகிறார். 25-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து மற்றும் பெருவிழா திருப்பலி நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள நசரேன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் செல்வராஜ் தலைமை தாங்க, மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார்.
    Next Story
    ×