என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தூய ஜார்ஜியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்28 April 2017 5:23 AM GMT (Updated: 28 April 2017 5:23 AM GMT)
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள எடத்துவா தூய ஜார்ஜியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் தூய ஜார்ஜியார் திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் குமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஜான் மனக்குந்நேல் கொடியேற்றி வைத்தார். சங்கனாசேரி உயர் மறைமாவட்ட துணை ஆயர் தாமஸ் தரயில் திருவிழா தொடக்க திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து, குழித்துறை மறைமாவட்ட தேனருவி சமூகத்தொடர்பு இயக்குனர் அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் தமிழில் திருப்பலி நிறைவேற்றினார்.
கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆலப்புழை மாவட்ட கலெக்டர், கேரள அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் தமிழில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும். இதில், தமிழக ஆயர்கள் பீட்டர் ரெமிஜியூஸ், ஜார்ஜ் மார் ராஜேந்திரன், வின்சென்ட் மார் பவுலோஸ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். விழா நாட்களில் தமிழ் வழிபாடுகளை நடத்த திருத்தல தமிழ் விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் தலைமையில் அருட்பணியாளர் ஹிலரி, சின்னப்பன், மார்ட்டின், சிங்கராயன் ஆகியோர் செய்துள்ளனர்.
திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஜான் மனக்குந்நேல் கொடியேற்றி வைத்தார். சங்கனாசேரி உயர் மறைமாவட்ட துணை ஆயர் தாமஸ் தரயில் திருவிழா தொடக்க திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து, குழித்துறை மறைமாவட்ட தேனருவி சமூகத்தொடர்பு இயக்குனர் அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் தமிழில் திருப்பலி நிறைவேற்றினார்.
கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆலப்புழை மாவட்ட கலெக்டர், கேரள அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் தமிழில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும். இதில், தமிழக ஆயர்கள் பீட்டர் ரெமிஜியூஸ், ஜார்ஜ் மார் ராஜேந்திரன், வின்சென்ட் மார் பவுலோஸ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். விழா நாட்களில் தமிழ் வழிபாடுகளை நடத்த திருத்தல தமிழ் விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் தலைமையில் அருட்பணியாளர் ஹிலரி, சின்னப்பன், மார்ட்டின், சிங்கராயன் ஆகியோர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X