search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழாநாளை தொடங்குகிறது
    X

    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழாநாளை தொடங்குகிறது

    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரை நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் செபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.

    வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி, மே மாதம் 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்பின் விருந்து, 6-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி போன்றவை நடக்கிறது.

    வருகிற 6-ந் தேதி மாலையில் செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.

    திருவிழா இறுதி நாளான 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமையில் திருப்பலி, மாலை 3 மணிக்கு தேர்ப்பவனி, 5.30 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்கு அருட்பணி பேரவை, பங்குமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×