என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழாநாளை தொடங்குகிறது
Byமாலை மலர்27 April 2017 5:23 AM GMT (Updated: 27 April 2017 5:23 AM GMT)
வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரை நிகழ்த்துகிறார்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் செபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.
வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி, மே மாதம் 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்பின் விருந்து, 6-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி போன்றவை நடக்கிறது.
வருகிற 6-ந் தேதி மாலையில் செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.
திருவிழா இறுதி நாளான 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமையில் திருப்பலி, மாலை 3 மணிக்கு தேர்ப்பவனி, 5.30 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்கு அருட்பணி பேரவை, பங்குமக்கள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் செபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகிறது.
வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நற்கருணை பவனி, மே மாதம் 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்பின் விருந்து, 6-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி போன்றவை நடக்கிறது.
வருகிற 6-ந் தேதி மாலையில் செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.
திருவிழா இறுதி நாளான 7-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமையில் திருப்பலி, மாலை 3 மணிக்கு தேர்ப்பவனி, 5.30 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்கு அருட்பணி பேரவை, பங்குமக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X