என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை: குழந்தை ஏசு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
Byமாலை மலர்13 April 2017 3:14 AM GMT (Updated: 13 April 2017 3:14 AM GMT)
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையையொட்டி சேலம் குழந்தை ஏசு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.
கிறிஸ்தவர்களின் கடவுளான ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) தவசு காலமாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தவசு காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கருதப்படுகிறது. இந்த வாரத்தில் அனைத்து தேவாலயங்களிலும் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுவது வழக்கம்.
சேலம் அரிசிபாளையம் குழந்தை ஏசு பேராலயத்தில் தவசுக்காலம் தொடங்கிய மார்ச் 1-ந் தேதி முதல் தினமும் திருப்பலி, சிறப்பு ஜெபம், சிலுவைபாதை போன்ற பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. புனித வாரத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு காலடி கழுவுதல் நிகழ்ச்சி பங்குதந்தை கிரகோரிராஜன் தலைமையில் நடக்கிறது. புனித வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு திருச்சிலுவை பாதை, மாலை 3 மணிக்கு சிலுவை மொழிகளில் சிறப்பு வழிபாடு, 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை, திருச்சிலுவை முத்தமிடல் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஒப்புரவு, இரவு 11 மணிக்கு திருமுழுக்கு ஆகிய நிகழ்ச்சிகள் ஆயர் சிங்கராயன் தலைமையில் நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அன்று காலை 8 மணிக்கு உயிர்ப்பு பெருவிழா திருப்பலியும், காலை 10 மற்றும் மாலை 5, 6 மணிக்கு தமிழ், ஆங்கிலத்தில் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையொட்டி நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும் படி பங்குதந்தை கிரகோரி ராஜன் தெரிவித்துள்ளார்.
சேலம் அரிசிபாளையம் குழந்தை ஏசு பேராலயத்தில் தவசுக்காலம் தொடங்கிய மார்ச் 1-ந் தேதி முதல் தினமும் திருப்பலி, சிறப்பு ஜெபம், சிலுவைபாதை போன்ற பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. புனித வாரத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு காலடி கழுவுதல் நிகழ்ச்சி பங்குதந்தை கிரகோரிராஜன் தலைமையில் நடக்கிறது. புனித வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு திருச்சிலுவை பாதை, மாலை 3 மணிக்கு சிலுவை மொழிகளில் சிறப்பு வழிபாடு, 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை, திருச்சிலுவை முத்தமிடல் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஒப்புரவு, இரவு 11 மணிக்கு திருமுழுக்கு ஆகிய நிகழ்ச்சிகள் ஆயர் சிங்கராயன் தலைமையில் நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அன்று காலை 8 மணிக்கு உயிர்ப்பு பெருவிழா திருப்பலியும், காலை 10 மற்றும் மாலை 5, 6 மணிக்கு தமிழ், ஆங்கிலத்தில் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையொட்டி நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும் படி பங்குதந்தை கிரகோரி ராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X