search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித வெள்ளி அனுசரிக்கப்படுவது ஏன்?
    X

    புனித வெள்ளி அனுசரிக்கப்படுவது ஏன்?

    இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் முகமாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
    புனித வெள்ளி கிறிஸ்தவர்களின் சமய ஆண்டில் ஒரு முக்கியமான நாளாகும். இது உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் முகமாக இது அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் கிறிஸ்தவர் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவர்.

    இவை பொதுவாக இயேசு சிலுவையில் அறையப்படுவதை நினைவுகூறும் வகையிலிருக்கும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.
     
    இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது. இயேசு மரித்த நாள் விவிலியத்திலுள்ள தகவல்களைக் கொண்டு இயேசு மரித்த நாளை சரியாக கணக்கிட முடியாது. விவிலியத்தில் இயேசு நிசான் மாதம் 14 அல்லது 15 ஆம் நாள் மரித்ததாக கூறப்பட்டுள்ளது.

    டைபிரியஸ் சீசரின் காலம் என்பதை விட ஆண்டு பற்றிய குறிப்பேதும் இல்லை. அனால் நான்கு நற்செய்திகளின் படியும் இயேசு மரித்தது ஆயத்தப்படுத்தல் நாளிலாகும். (ஓய்வுநாளுக்கு முதல் நாளாகும்) இதன்படி இயேசு மரித்தது வெள்ளிக்கிழமையாகும். மேலும் இயேசு மரித்த நாள் கி.பி. 33 ஏப்பிரல் 3 ஆம் நாளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    இத்தினத்தில் பகுதி சந்திரகிரகணமும் ஏற்பட்டுள்ளது. (இயேசு சிலுவையில் உயிர் நீத்தபோது வானம் இருண்டது). தற்போது புனித வெள்ளி ஏப்ரல் 23 க்கும் மே 7 க்குமிடையே ஒரு வெள்ளியில் அனுசரிக்கப்படுகிறது.
    Next Story
    ×