search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026-ல் மற்றவர்கள் வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள்.
    • தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், என்னிடம் வண்டியில்லை.

    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.

    இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.




    இப்படம் வருகிற 26- ந்தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் "ரத்னம்" பட பிரமோஷன் பணிகளில் விஷால் ஈடுபட்டு உள்ளார். சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஷால் கூறியதாவது :-

    பாராளுமன்ற தேர்தலில் நான் சைக்கிளில் சென்று வாக்களித்தற்கு காரணம், விஜய்யின் இன்ஸ்பிரேஷன் என சொல்ல முடியாது. என்னிடம் வண்டியில்லை. அப்பா, அம்மாவிடம் வண்டி உள்ளது. என்னுடைய வண்டியை விற்றுவிட்டேன்.



    நடிகர் விஜய்யை பொறுத்தவரை அவரது தன்னம்பிக்கை பிடிக்கும். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷன் மோசமாக உள்ளது.

    'டிராபிக் ஜாம்' இல்லாமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதற்காக சைக்கிளில் சென்றேன் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் மாற்றம் தேவை. 2026-ல் மற்றவர்கள் வருவதற்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள்.

    எல்லோரும் நல்லது செய்யவே அரசியலுக்கு வருகின்றனர்.நீங்கள் நல்லது செய்துவிட்டால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறோம்.




    தமிழ்நாட்டிற்கு மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால், என்னைப் போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம்.

    திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது மக்கள் நலப்பணிகள். மக்களுக்கு ஏதாவது என்றால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எம்எல்ஏ, எம்.பிக்க்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். என்ன கொடுமை இது? "என்றார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     வேட்டையன் படத்திற்கு பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

    படத்தில் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. நேற்று லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார்.

    படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில் தற்பொழுது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் கூலி  என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும்.
    • ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

    1984 ஆம் ஆண்டு 'ஏப்ரல் 18' படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு கமல் நடித்து வெளியான எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார் ஷோபனா.

    பின் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார்.

    அதன் பின் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி உள்பட ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில் நடித்தார்.

    இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக ஷோபனா இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 - வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 - வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

    இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்.

    தற்பொழுது அவர்கள் நடிக்கும் படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். தரூண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார்.

    இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல் -360 'என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

     

    கடைசியாக மோகன்லால் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை, எல் 360 படம் வெற்றியடைய வேண்டும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. இது குறித்து மோகன்லால் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை.
    • இயக்குநர் துரை மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற 'பசி' திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய 'பசி' திரைப்படத்திற்கு 1979-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

    சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனர் , திரைப்படம், நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த எதார்த்த திரைப்படம். ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

    இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை. அவர் இயக்கிய அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவைகளாகும்.

    இயக்குநர் துரை மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    • இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது.
    • நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு- திரிஷா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.




    இந்நிலையில் படத்தில் இருந்து விலகிய நடிகர்கள் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு

    விரைவில் தொடங்க உள்ளது. 'சைபீரியாவில் 'க்ளைமாக்ஸ்' காட்சியும் மற்றும் புதுடெல்லி, சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.




    இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. அலை, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிம்புக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு- திரிஷா இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • . 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது

    ரஜினி வேட்டையன் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.

    படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

    நேற்று லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் நாளை ஆறு மணி முதல் D.I.S.C.O என்ற தலைப்பில் போஸ்ட்ரை வெளியிட்டார்.

    படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இன்று மாலை டைட்டில் மற்றும் காட்சி முன்னோட்டம் வெளியாகும் நிலையில் லோகேஷ் கனகராஜ் அவரது துணை இயக்குனர்களுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.
    • இப்படம் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி வெளியாகவுள்ளது

    நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகனாக மாறியவர்களில் சந்தானம் ஒருவர். 2014 ஆம் ஆண்டு ஸ்ரீனாத் இயக்கத்தில் வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    சில மாதங்களுக்கு முன் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல நகைச்சுவை திரைப்படமாக சந்தானத்திற்கு அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

    ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். கோபுரம் பிலிம் ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உட்பட பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

     

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து கேரக்டர் ரிவீலிங் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பால சரவணன் பாலா என்ற கதாப்பாத்திரத்திலும். தம்பி ராமைய்யா விஜயகுமார் ஜமீனாகவும், முனிஸ்காந்த பாடி பல்ராமாகவும் சந்தானம் வெற்றிவேல் கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். சந்தானம் மணமேடையில் அழுதுக்கொண்டு இருப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD).
    • படம் வரும் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறதது.

    சென்ற ஆண்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றது.

    மிகப் பெரிய பொருட் செலவிலான இந்த திரைப்படம் 6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதைகள பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. படம் வரும் மே 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் அமிதாப் பச்சனின் கேரக்டர் ரிவீலிங் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தில் அமிதாப் பச்சன் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காண்பித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா இணைய உள்ளார்
    • முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

    இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.




    மேலும் தலைவர் -171 படம் தங்க கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகியது.

    ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் சத்யராஜ் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.




    மேலும் ரஜினியின் மகளாக ஸ்ருதி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .இப்படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில் இப்படத்தின் ''டைட்டில்' இன்று மாலை ( 22 - ந் தேதி) 6 மணிக்கு வெளியாக உள்ளது. தலைவர் - 171 படத்துக்கு 'டைட்டில்' கழுகு, ராணா, தங்கம் அல்லது கடிகாரம் என 4 பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்த 4 ல் ஒன்று தான் இப்படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில் 'தலைவர் 171' படத்தில் ரஜினியுடன் தெலுங்கு  நடிகர் நாகார்ஜுனா இணைய உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது.

    நடிகர் சூர்யாவின் மகன் தேவ், கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் தங்களிடம் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், பங்கேற்ற சூர்யாவின் மகன், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். மகன் தேவ்-ன் சண்டை காட்சியை நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் மொபைலில் வீடியோ எடுத்தனர்.

    இதில் மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா மகன் தேவ்-ம் பிளாக் பெல்ட் பெற்றார்.

    • தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
    • படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

    "எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி. அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவம் தான் இந்த படத்தின் கதை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று தெரிவித்தார் இயக்குனர் .

    'ஒரு நொடி' படத்தில் தமன்குமார், எம்.எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. காணாப்போன கணவனான எம்.எஸ் பாஸ்கர் தேடி போலிசிடம் புகார் கொடுக்கிறார் மனைவி. போலிஸ் கதாப்பாத்திரத்தில் தமன்குமார் நடித்துள்ளார். அதற்கடுத்து என்ன நடந்தது என்பதே கதை. டிரெயிலர் மிக விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
    • படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

    பிரபல நடிகர் அஜித் - திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

    அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சில வாரங்களுக்கு முன் வெளியாகிய அஜித் கார் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.

    இந்நிலையில்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித்   நடிக்கவுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

    மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் கதாநாயகியான ஸ்ரீ லீலா 'குட் பேட் அக்லி' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×