என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கலகலப்பு-2
Byமாலை மலர்16 Oct 2017 2:27 PM GMT (Updated: 16 Oct 2017 2:27 PM GMT)
சுந்தர் சி.இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் `கலகலப்பு'. சிவா, சந்தானம், அஞ்சலி,ஓவியா நடித்த இந்த படம் நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு தயாரானது.
சுந்தர் சி.இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் `கலகலப்பு'. சிவா, சந்தானம், அஞ்சலி,ஓவியா நடித்த இந்த படம் நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு தயாரானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற `கலகலப்பு' படத்தின் 2-ம் பாகம் இப்போது தயாராகிறது.
`கலகலப்பு-2' என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், சிவா இணைகிறார்கள். கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, வி.டி.வி.கணேஷ், யோகிபாபு, ரோபோசங்கர், மனோபாலா, சிங்கம்புலி, சந்தானபாரதி, வையாபுரி, அனுமோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை-ஹிப்ஹாப் தமிழா ஆதி. வசனம்-பத்ரி, தயாரிப்பு-குஷ்பு சுந்தர், கதை, திரைக்கதை, இயக்கம்- சுந்தர்.சி. குஷ்பு சுந்தர் ஏற்கனவே `கிரி', `ரெண்டு', `தலைநகரம்', `கலகலப்பு', `தீயாவேலை செய்யணும் குமாரு', `அரண்மனை', `ஐந்தாம்படை', `மீசையை முறுக்கு' படங்களை தயாரித்துள்ளார். இப்போது `கலகலப்பு-2' படத்தை தயாரிக்கிறார்.
`கலகலப்பு-2' நகைச்சுவை படமாக உருவாகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி 15- நாள் நடைபெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு காசி, இந்தூர், புனே, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் 2-வது வாரத்திற்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க திட்ட மிட்டுள்ளனர்.
`கலகலப்பு-2' என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், சிவா இணைகிறார்கள். கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, வி.டி.வி.கணேஷ், யோகிபாபு, ரோபோசங்கர், மனோபாலா, சிங்கம்புலி, சந்தானபாரதி, வையாபுரி, அனுமோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை-ஹிப்ஹாப் தமிழா ஆதி. வசனம்-பத்ரி, தயாரிப்பு-குஷ்பு சுந்தர், கதை, திரைக்கதை, இயக்கம்- சுந்தர்.சி. குஷ்பு சுந்தர் ஏற்கனவே `கிரி', `ரெண்டு', `தலைநகரம்', `கலகலப்பு', `தீயாவேலை செய்யணும் குமாரு', `அரண்மனை', `ஐந்தாம்படை', `மீசையை முறுக்கு' படங்களை தயாரித்துள்ளார். இப்போது `கலகலப்பு-2' படத்தை தயாரிக்கிறார்.
`கலகலப்பு-2' நகைச்சுவை படமாக உருவாகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி 15- நாள் நடைபெறுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு காசி, இந்தூர், புனே, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் 2-வது வாரத்திற்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடிக்க திட்ட மிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X