என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஆறாம் வேற்றுமை
Byமாலை மலர்9 Aug 2017 8:09 AM GMT (Updated: 9 Aug 2017 8:09 AM GMT)
ஹாலிவுட் பாணியில் ஆதிவாசிகள் கதையாக உருவாகும் ‘ஆறாம் வேற்றுமை’ படத்தின் முன்னோட்டம்.
செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் படம் ‘ஆறாம் வேற்றுமை’.
புதுமுகங்கள் அஜய் கதாநாயகனாகவும், கோபிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு - அறிவழகன், நடனம் - பாபி ஆண்டனி, பாடல்கள் - யுகபாரதி, மோகன் ராஜ், தயாரிப்பு - சக்திவேல், எழுத்து, இயக்கம் - ஹரி கிருஷ்ணா.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
“இது இன்றைய கால கட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதி வாசிகள் பற்றிய படம். ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ‘ஆறாம் வேற்றுமை’ என பெயர் வைத்தோம். மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் இது.
ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். நாகரிக வாழ்க்கை வாழ்கிறான். அதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான். இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப்பகுதியை தேடிப்பிடித்தோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றோம்.
கதை பற்றிய நம்பிக்கையை மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டோம். இது ஹாலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அபகலிப்டா’ போன்ற படம். ஸ்ரீ முத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர் ஆர்.பாலசந்தர் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார்” என்றார்.
புதுமுகங்கள் அஜய் கதாநாயகனாகவும், கோபிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு - அறிவழகன், நடனம் - பாபி ஆண்டனி, பாடல்கள் - யுகபாரதி, மோகன் ராஜ், தயாரிப்பு - சக்திவேல், எழுத்து, இயக்கம் - ஹரி கிருஷ்ணா.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
“இது இன்றைய கால கட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதி வாசிகள் பற்றிய படம். ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ‘ஆறாம் வேற்றுமை’ என பெயர் வைத்தோம். மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் இது.
ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். நாகரிக வாழ்க்கை வாழ்கிறான். அதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான். இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப்பகுதியை தேடிப்பிடித்தோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றோம்.
கதை பற்றிய நம்பிக்கையை மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டோம். இது ஹாலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அபகலிப்டா’ போன்ற படம். ஸ்ரீ முத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர் ஆர்.பாலசந்தர் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X