என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மதுர வீரன்
Byமாலை மலர்7 Aug 2017 12:35 PM GMT (Updated: 7 Aug 2017 1:19 PM GMT)
ஜல்லிக்கட்டு வீரராக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அசத்தும் ‘மதுர வீரன்’ படத்தின் முன்னோட்டம்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு ‘மதுர வீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் பி.ஜி.முத்தையா. இசை - சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் - யுகபாரதி, எடிட்டிங் - கே.எல். பிரவீன், கலை - விதேஷ், சண்டை பயிற்சி - ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு - கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு - ஜி.சுப்பிரமணியன். ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டபடம். இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்டு முதல் வாரம் மீண்டும் மதுரையில் நடைபெறவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடையும்.
வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் பி.ஜி.முத்தையா. இசை - சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் - யுகபாரதி, எடிட்டிங் - கே.எல். பிரவீன், கலை - விதேஷ், சண்டை பயிற்சி - ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு - கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு - ஜி.சுப்பிரமணியன். ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டபடம். இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்டு முதல் வாரம் மீண்டும் மதுரையில் நடைபெறவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X