என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தோட்டம்
Byமாலை மலர்5 July 2017 11:59 PM GMT (Updated: 5 July 2017 11:59 PM GMT)
மலேசிய தமிழ் தொழிலாளர்கள் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘தோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
புளு ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தோட்டம்’. இதில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்.
நாயகியாக தனா, விவியாஷான் என்ற சீன நடிகை நடிக்கிறார்கள். இவர்களுடன் ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில் வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சதீஷ் பி சரண், இசை - சாய், பாடல்கள் - நா.முத்துக்குமார், அண்ணாமலை மாணிக்க சண்முகம், எடிட்டிங் - வினோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அரங்கண்ணல் ராஜ்.
படம் பற்றி இயக்குனர் கூறும் போது...
“ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டுதான். இலங்கை, மலேசியா உள்பட எல்லா நாடுகளும் இதில் அடங்கும்.
அங்குள்ள விவசாய கூலித் தொழிலாளிகள் பெரும்பாலும் இந்தியர்களே, அதிலும் குறிப்பாக தமிழர்களே... அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகிவிட்டது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கைமாறிவிட்டது. அப்படி கைமாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பது கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சினையை இதில் அலசியிருக்கிறோம்.
அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ் பையனுக்கும் சீனப்பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம்.
மலேசிய நடிகர், நடிகைகள் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து தோட்டம் படத்தை உருவாக்கி உள்ளோம்.
விரைவில் உலக மெங்கும் தோட்டம் வெளியாகிறது” என்றார்.
நாயகியாக தனா, விவியாஷான் என்ற சீன நடிகை நடிக்கிறார்கள். இவர்களுடன் ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில் வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சதீஷ் பி சரண், இசை - சாய், பாடல்கள் - நா.முத்துக்குமார், அண்ணாமலை மாணிக்க சண்முகம், எடிட்டிங் - வினோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அரங்கண்ணல் ராஜ்.
படம் பற்றி இயக்குனர் கூறும் போது...
“ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டுதான். இலங்கை, மலேசியா உள்பட எல்லா நாடுகளும் இதில் அடங்கும்.
அங்குள்ள விவசாய கூலித் தொழிலாளிகள் பெரும்பாலும் இந்தியர்களே, அதிலும் குறிப்பாக தமிழர்களே... அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகிவிட்டது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கைமாறிவிட்டது. அப்படி கைமாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பது கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சினையை இதில் அலசியிருக்கிறோம்.
அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ் பையனுக்கும் சீனப்பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம்.
மலேசிய நடிகர், நடிகைகள் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து தோட்டம் படத்தை உருவாக்கி உள்ளோம்.
விரைவில் உலக மெங்கும் தோட்டம் வெளியாகிறது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X