என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சிவா மனசுல புஷ்பா
Byமாலை மலர்12 Jun 2017 11:18 PM GMT (Updated: 12 Jun 2017 11:18 PM GMT)
அருந்தவராஜா இயக்கத்தில் வாராகி - ஷிவானி நடிப்பில் உருவாகி வரும் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’.
இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை.
இந்த படத்தில் நாயகனாக வாராகி நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு - நாககிருஷ்ணன், திரைக்கதை, இயக்கம் - அருந்தவராஜா. இவர் பாலு மகேந்திரா, சேது மாதவன், பாலகுமாரன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
படம் குறித்து கூறிய வாராகி, “இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை. ஒருவருக் கொருவர் இருஎதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இதில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும் போது பல அதிர்வலைகளை தமிழக அரசியல் சந்திக்கும்,” என்றார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தயாரிப்பாளர் டி சிவா, ஜே.கே ரித்தீஷ், தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ்காமாட்சி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினார்கள்.
இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை.
இந்த படத்தில் நாயகனாக வாராகி நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு - நாககிருஷ்ணன், திரைக்கதை, இயக்கம் - அருந்தவராஜா. இவர் பாலு மகேந்திரா, சேது மாதவன், பாலகுமாரன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
படம் குறித்து கூறிய வாராகி, “இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை. ஒருவருக் கொருவர் இருஎதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இதில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும் போது பல அதிர்வலைகளை தமிழக அரசியல் சந்திக்கும்,” என்றார்.
இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தயாரிப்பாளர் டி சிவா, ஜே.கே ரித்தீஷ், தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ்காமாட்சி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X