search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஆடவர்
    X

    ஆடவர்

    தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆண்கள் மட்டுமே நடித்து வரும் படமான ‘ஆடவர்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஆடவர்’.

    இதில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர். ராபர்ட், கார்த்திக், சரவணன், சிரஞ்சீவி ஆகிய நான்கு புதுமுகங்கள் கதையின் நாயகனாக நடித்துள்ளனர். இவர்களுடன் ‘சேதுபதி’ ஜெயச்சந்திரன், ரமேஷ், மாஸ்டர் கிரண் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    கேரள அரசின் விருது பெற்ற தஷி இசைஅமைத்துள்ளார். படத்தொகுப்பு-சீனிவாசன், நடனம்-ரமேஷ் கமல், தாயாரிப்பு- சொ. சிவகுமார் பிள்ளை. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்- ஸ்ரீரஞ்சன்.



    “ சுனாமி குறித்து ஆய்வு செய்வதற்காக 4 இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதில் இருந்து மீண்டு தங்களின் ஆய்வில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதும் தான் கதை. மாஸ்டர் கிரண் என்ற 10 வயது சிறுவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான். இது திருப்பு முனைகதாபாத்திரம். அவன் சிறப்பாக நடித்து படக்குழுவினரிடம் பாராட்டு பெற்றான்” என்றார்.

    இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் எஸ்.ஆர்.எம்-ன் சிவாஜி திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, கல்லூரியின் முதல்வர் ஏ.சுப்பையா பாரதி மற்றும் துறை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் கானா உலகநாதன், டியாலோ கோபு ஆகியோர் படத்தின் பாடல்களை பாடினார்கள். ‘ஆடவர்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.
    Next Story
    ×