search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அறையில் நடந்தது என்ன? ஹோட்டலில் இருந்து அவசரமாக வெளியேறிய நடிகை!
    X

    அறையில் நடந்தது என்ன? ஹோட்டலில் இருந்து அவசரமாக வெளியேறிய நடிகை!

    நடிகை ஒருவர் ஹோட்டலில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ளார். அங்கு என்ன நடந்தது? என்பதை அறிய கீழே பார்ப்போம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் பெரிய நம்பர் நடிகை தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வருகிறார். இதனால், அவருக்கு வாய்ப்புகள் அதிகமாகிறதே தவிர, ஒருபோதும் குறைந்ததில்லை. இதனால், சென்னையிலேயே தனி வீடு ஒன்றை வாங்கி அங்கு தனது காதலருடன் குடியமர்ந்தார்.

    ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, கடந்த சில மாதங்களாக இந்த நடிகை வீட்டை விட்டு வெளியேறி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தாராம். அங்கிருந்துகொண்டே படப்பிடிப்புக்கு செல்வது, திரும்புவது என்று இருந்த நடிகை தற்போது மனம் மாறி, ஹோட்டலை விட்டு வெளியேறி தனது வீட்டுக்கே திரும்பிவிட்டாராம்.



    அவர் ஏன் ஹோட்டலுக்கு சென்றார்? மறுபடியும் ஏன் ஹோட்டலை விட்டு வெளியே சென்றார்? என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பெரிய கேள்வியே எழுந்துள்ளதாம். அவர் ஹோட்டலில் சென்று தங்கும் அளவுக்கு அவரது வீட்டில் என்ன நடந்தது? மறுபடியும் ஹோட்டலை விட்டு வெளியேறும் அளவுக்கு அவரது அறையில் என்ன நடந்தது? என்பதும் மர்மமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×