என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பேராசையால் மார்க்கெட்டை இழந்த நடிகை!
Byமாலை மலர்23 March 2017 12:26 PM GMT (Updated: 23 March 2017 12:26 PM GMT)
நடிகை ஒரு தனது பேராசையால் மார்க்கெட்டை இழந்துபோயுள்ளார். அந்த நடிகை யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
கண்மணி நாயகிக்கு சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின் என்ற ரேஞ்சுக்குத்தான் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஏன் ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை என்று விசாரிக்கையில் நடிகை அதிக சம்பளம் கேட்பதால்தான் அவருக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஒருசிலர் கூறி வருகின்றனர்.
ஆனால், உண்மையில் விசாரிக்கையில் அந்த நடிகைக்கு இயக்குனராக வேண்டும் என்று நீண்டநாள் ஆசை உள்ளதாம். இப்போதைக்கு எந்த படத்திலாவது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும்போது, இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக அந்த படத்தை விட்டு போகமுடியாது.
அந்த நேரத்தில் தனது கனவும் பாழாய் போய்விடும் என்பதாலேயே, இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மட்டும் நடித்துவிட்டு போய்விடுகிறாராம். இப்படி நடிக்கும்போது, ஒருசில காட்சிகளுக்காக சில நாட்கள் மட்டும் ஒதுக்கினாலே போதுமானது. மற்ற நாட்களில் இயக்குனராவதற்கான முயற்சியில் இறங்கலாம் என்ற எண்ணத்துடன்தான் நடிகை இந்த மாதிரி வருகிற வாய்ப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து வருகிறாராம்.
ஆனால், இதுவரைக்கும் நடிகைக்கு யாரும் இயக்குனர் வாய்ப்பை வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது. இயக்குனர் ஆசையால் நடிக்க வரும் வாய்ப்பையும் இழந்து, ஒருகட்டத்தில் நடிகை சினிமாவை விட்டே ஓடிப் போகப்போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
ஆனால், உண்மையில் விசாரிக்கையில் அந்த நடிகைக்கு இயக்குனராக வேண்டும் என்று நீண்டநாள் ஆசை உள்ளதாம். இப்போதைக்கு எந்த படத்திலாவது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும்போது, இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக அந்த படத்தை விட்டு போகமுடியாது.
அந்த நேரத்தில் தனது கனவும் பாழாய் போய்விடும் என்பதாலேயே, இரண்டாவது ஹீரோயின், மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மட்டும் நடித்துவிட்டு போய்விடுகிறாராம். இப்படி நடிக்கும்போது, ஒருசில காட்சிகளுக்காக சில நாட்கள் மட்டும் ஒதுக்கினாலே போதுமானது. மற்ற நாட்களில் இயக்குனராவதற்கான முயற்சியில் இறங்கலாம் என்ற எண்ணத்துடன்தான் நடிகை இந்த மாதிரி வருகிற வாய்ப்புகளையெல்லாம் தட்டிக் கழித்து வருகிறாராம்.
ஆனால், இதுவரைக்கும் நடிகைக்கு யாரும் இயக்குனர் வாய்ப்பை வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது. இயக்குனர் ஆசையால் நடிக்க வரும் வாய்ப்பையும் இழந்து, ஒருகட்டத்தில் நடிகை சினிமாவை விட்டே ஓடிப் போகப்போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X