என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திட்டமிட்டதற்கு முன்பே நடைபெறுகிறதா நடிகையின் திருமணம்?
Byமாலை மலர்3 March 2017 1:21 PM GMT (Updated: 3 March 2017 1:21 PM GMT)
ஒரு நடிகையின் திருமணம் திட்டமிட்டதற்கு முன்பே நடைபெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சமத்தான நடிகைக்கு பிரபல தெலுங்கு நடிகரோடு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனது. தெலுங்கு நடிகரோட அப்பாவும் தெலுங்கில் உள்ள உச்ச நடிகர்களில் ஒருவர். திருமண நிச்சயதார்த்ததை தொடர்ந்து இன்று நான்கைந்து மாதங்கள் கழிந்தபிறகு திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார் அந்த உச்ச நடிகர்.
இவர்கள் திருமணத்திற்குள் தனது மூத்த மகனின் திருமணத்தை நடத்திவிடலாம் என்று முடிவு செய்திருந்த உச்ச நடிகர், அதற்கான முயற்சியிலும் களமிறங்கினார். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை, திடீரென்று தனது மூத்த மகனின் திருமணத்தை எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்திவிட்டார்.
இந்நிலையில், தனது அடுத்த மகனின் திருமணத்தையாவது உடனடியாக நடித்த முடிவு செய்துள்ளாராம் அந்த உச்ச நடிகர். தன்னுடைய இரண்டாவது மகனுக்கு நிச்சயமான சமத்தான நடிகையோ இப்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனால், இப்போதைக்கு எப்படி திருமணம் செய்வது என்ற யோசனையும் இருக்கிறதாம்.
இருப்பினும், எவ்வளவு சீக்கிரத்தில் சமத்தான நடிகை அந்த படங்களில் நடித்துக் கொடுக்க முடியுமோ? அவ்வளவு சீக்கிரத்தில் நடித்து கொடுத்துவிடும்படி உச்ச நடிகர், சமத்தான நடிகையிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். ஏனென்றால், ஒரு நல்ல காரியம் நின்றுபோனால், உடனடியாக வேறு ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால்தான் நல்லது என்று உச்ச நடிகருக்கு அவருக்கு நெருங்கியவர்கள் கூறினார்களாம்.
இதனால்தான் இவ்வளவு அவசரப்படுகிறாராம் அந்த உச்ச நடிகர். நடிகையை அவர் அவசரப்படுத்துவதை பார்த்தால், திருமணத்திற்கு பிறகு சமத்தான நடிகையை உச்ச நடிகர் நடிக்கவிட மாட்டார் என்று தெரிவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இவர்கள் திருமணத்திற்குள் தனது மூத்த மகனின் திருமணத்தை நடத்திவிடலாம் என்று முடிவு செய்திருந்த உச்ச நடிகர், அதற்கான முயற்சியிலும் களமிறங்கினார். ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை, திடீரென்று தனது மூத்த மகனின் திருமணத்தை எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்திவிட்டார்.
இந்நிலையில், தனது அடுத்த மகனின் திருமணத்தையாவது உடனடியாக நடித்த முடிவு செய்துள்ளாராம் அந்த உச்ச நடிகர். தன்னுடைய இரண்டாவது மகனுக்கு நிச்சயமான சமத்தான நடிகையோ இப்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதனால், இப்போதைக்கு எப்படி திருமணம் செய்வது என்ற யோசனையும் இருக்கிறதாம்.
இருப்பினும், எவ்வளவு சீக்கிரத்தில் சமத்தான நடிகை அந்த படங்களில் நடித்துக் கொடுக்க முடியுமோ? அவ்வளவு சீக்கிரத்தில் நடித்து கொடுத்துவிடும்படி உச்ச நடிகர், சமத்தான நடிகையிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். ஏனென்றால், ஒரு நல்ல காரியம் நின்றுபோனால், உடனடியாக வேறு ஒரு நல்ல காரியத்தை தொடங்கினால்தான் நல்லது என்று உச்ச நடிகருக்கு அவருக்கு நெருங்கியவர்கள் கூறினார்களாம்.
இதனால்தான் இவ்வளவு அவசரப்படுகிறாராம் அந்த உச்ச நடிகர். நடிகையை அவர் அவசரப்படுத்துவதை பார்த்தால், திருமணத்திற்கு பிறகு சமத்தான நடிகையை உச்ச நடிகர் நடிக்கவிட மாட்டார் என்று தெரிவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X