search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரபல நடிகைக்கு பலபேருடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய முன்னாள் மாமியார்
    X

    பிரபல நடிகைக்கு பலபேருடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய முன்னாள் மாமியார்

    பிரபல நடிகை ஒருவர் பலபேருடன் தொடர்பில் உள்ளதாக அவருடைய முன்னாள் மாமியார் குற்றஞ்சாட்டியுள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    மலையாளத்தில் பிரபலமான காவியமான நடிகை சமீபத்தில் மூன்றெழுத்து நடிகரை திருமணம் செய்துகொண்டார். காவியமானர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதேபோல் மூன்றெழுத்து நடிகரும் ஏற்கெனவே தனது காதல் மனைவியை பிரிந்தவர். இருவரின் தனிமையும் தற்போது அவர்களை ஒன்று சேர்த்துள்ளது.

    இந்நிலையில், காவியமானவரின் முன்னாள் மாமியார் அவரைப் பற்றி கூறிய ஒரு குற்றச்சாட்டு தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், காவியமானவர் மூன்றெழுத்து நடிகர் மட்டுமில்லாமல், சாமியார் மற்றும் பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்தாராம். இதுதான் அவரின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

    அதுமட்டுமில்லாமல், தன்னுடைய மகனை விருப்பமில்லாமலேயே காவியமானவர் திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். தனது மகனை திருமணம் செய்துகொண்ட பிறகும், மூன்றெழுத்து நடிகருடன் மிகவும் நெருக்கமாக காவியமானவர் பழகி வந்ததாகவும் அவர் அந்த குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால், முன்னாள் மாமியாரின் குற்றச்சாட்டை காவியமானவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம். தற்போது தனது காதல் கணவருடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறாராம். 
    Next Story
    ×