search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வீண் வதந்தியால் கொதித்தெழுந்த நடிகை
    X

    வீண் வதந்தியால் கொதித்தெழுந்த நடிகை

    தன்னை பற்றி வீண் வதந்தி கிளப்பி விட்டதால் நடிகை ஒருவர் கொதித்தெழுந்துள்ளார். அவர் யார்? அது என்ன வதந்தி? என்பதை கீழே பார்ப்போம்..
    ரூபி நடிகையின் தற்போதைய சினிமா வாழ்க்கை நல்லபடியாகத்தான் போய்க்கிட்டிருக்கு. அப்படியிருக்கையில், அவரை பற்றி சில பேர் வீண் வதந்திகளை கிளப்பி விட்டுள்ளார்கள். இவரைப் பற்றி ஏற்கெனவே நிறைய வதந்திகள் வெளிவந்திருக்கிறது. அப்போதெல்லாம் பொறுமையை கடைபிடித்தவர், தற்போது சீறி பாய்ந்துள்ளார்.

    சமீபத்தில் ரூபி நடிகை நடித்த பேய் படம் பெரிய ஹிட்டானதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், வீண் வதந்திகளால் தனது மார்க்கெட்டை அழித்துவிடுவார்களோ என்ற பயம்தான் அவருடைய கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வதந்தி வேறொன்றுமில்லை. ரூபி நடிகை சமீபத்தில் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று சொன்னதுதானாம்.

    இதிலென்ன வதந்தி, இதற்கு எதற்கு கோபப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், ரூபி நடிகையிடம் கேட்டாலோ, எந்த படத்தில் நடிக்க வேண்டும், எந்த படத்தில் நடிக்கக்கூடாது, எந்த படத்தில் நடிக்கிறேன் என்ற எல்லா விவரங்களையும் அவர்தான் கூறவேண்டும். மற்றபடி யாரும் சொல்லக்கூடாது என்று கோபத்தில் கொந்தளிக்கிறாராம்.

    இவர் சொல்வதுபோல், இதுவரை அவர் எத்தனை படங்களுக்கு நான் இந்த படத்தில் நடிக்கிறேன், அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை சொல்லியிருக்கிறார் என்பதுதான் கோலிவுட்டில் பெரிய கேள்வியாக இருக்கிறது. நிறைய வதந்திகள்தான் பின்னாளில் உண்மையாக மாறியிருக்கிறது என்பதை ரூபி நடிகை அறிந்திருக்கமாட்டார் போல.....
    Next Story
    ×