search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகையின் எய்ட்ஸ் புரளியால் சினிமா வாழ்க்கையை இழந்த நடிகர்
    X

    நடிகையின் எய்ட்ஸ் புரளியால் சினிமா வாழ்க்கையை இழந்த நடிகர்

    நடிகை ஒருவர் கிளப்பிவிட்ட எய்ட்ஸ் புரளியால் நடிகர் ஒருவர் சினிமா வாழ்க்கையையே இழந்துள்ளார். அந்த நடிகை, அந்த நடிகர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
    90-களில் முன்னணி நடிகராக வலம்வந்த மைக் நடிகருக்கு திடீரென்று எய்ட்ஸ் நோய் உள்ளதாக எழுந்த புரளியால் அவருடைய திரை வாழ்க்கையே முடிந்து போனது. 90-களில் எய்ட்ஸ் நோய் என்பது பெரிய நோயாக கருதப்பட்டதால் அவரை நெருங்கவே பல இயக்குனர்கள் தயங்கினார்கள். ஹீரோயின்கள் கதறி ஓட ஆரம்பித்தனர்.

    அவருடைய திரைவாழ்க்கை முடிந்துவிட்டாலும் இன்னமும் அவர் அப்படியேத்தான் இருக்கிறார். இந்நிலையில், தனக்கு எய்ட்ஸ் என்று புரளியை கிளப்பிவிட்டவர் யார் என்பதை அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார். இவருடன் நிறைய படங்களில் பூ நடிகைதான் அந்த புரளியை கிளப்பிவிட்டவராம்.

    பூ நடிகைக்கு மைக் நடிகர் மீது அதீத காதலாம். அந்த காதலை அவரிடம் வெளிப்படுத்தி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நடிகரை பூ நடிகை ரொம்பவும் வற்புறுத்தினாராம். ஆனால், மைக் நடிகரோ அந்த நடிகையை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்தாராம். இதனால் கோபமடைந்த நடிகை, மைக் நடிகருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டு அவரின் திரை வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாராம். 
    Next Story
    ×