என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகர் விஷால், ரசிகர்களுடன் ஆலோசனை
Byமாலை மலர்4 Dec 2017 2:43 AM GMT (Updated: 4 Dec 2017 2:43 AM GMT)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் விஷால் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. இதை முன்னிட்டு திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஜெயசீலன் என்பவரது வீட்டில் அவர் ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக தேர்தல் பிரசாரம், வேட்பு மனுதாக்கல் செய்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 1 மணி நேரம் அவர் கலந்துரையாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டு விஷால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நடிகர் விஷால் வந்திருப்பது தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X