என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் `சங்கமித்ரா'வாக தேர்வாகிய பாலிவுட் நடிகை
Byமாலை மலர்21 Oct 2017 11:55 AM GMT (Updated: 21 Oct 2017 11:55 AM GMT)
சுருதி ஹாசன் விலகியதை அடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சங்கமித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' பிரமாண்ட படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கின்றனர். `சங்கமித்ரா'வாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்த சுருதி ஹாசன் சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறியதால் `சங்கமித்ரா' கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்து வந்தது.
`சங்கமித்ரா'வாக நடிக்க பாலிவுட் நடிகை திஷா படானி தேர்வு செய்யபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், தற்போது அது உறுதியாகி இருக்கிறது.
நடிகை தேர்வு தாமதமானதால் சுந்தர்.சி தற்போது `கலகலப்பு-2' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு `சங்கமித்ரா' பட பணிகளை சந்தர்.சி தொடங்க இருக்கிறார். தற்போது `சங்கமித்ரா' படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகு டிசம்பர் முதல் `சங்கமித்ரா' படததின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ தோனண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.
படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஒப்பந்தமாகி இருக்கின்றனர். `சங்கமித்ரா'வாக நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்த சுருதி ஹாசன் சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறியதால் `சங்கமித்ரா' கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்து வந்தது.
`சங்கமித்ரா'வாக நடிக்க பாலிவுட் நடிகை திஷா படானி தேர்வு செய்யபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், தற்போது அது உறுதியாகி இருக்கிறது.
நடிகை தேர்வு தாமதமானதால் சுந்தர்.சி தற்போது `கலகலப்பு-2' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பிறகு `சங்கமித்ரா' பட பணிகளை சந்தர்.சி தொடங்க இருக்கிறார். தற்போது `சங்கமித்ரா' படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகு டிசம்பர் முதல் `சங்கமித்ரா' படததின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ தோனண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X