என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சமூக கருத்துக்களை நீக்க வேண்டியதில்லை: விஜய் மற்றும் `மெர்சல்' படக்குழுவுக்கு விஷால் பாராட்டு
Byமாலை மலர்21 Oct 2017 10:09 AM GMT (Updated: 21 Oct 2017 10:09 AM GMT)
`மெர்சல்' படத்தின் மூலம் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்லியிருக்கும் விஜய், அட்லி மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் மெர்சல்.
இப்படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில், படம் வெளியான பின்னரும் மெர்சல் படத்திற்கு சோதனை வந்திருக்கிறது. படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு உள்ளிட்ட சில வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தினார்.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த காட்சிகளை தயாரிப்பு தரப்பு நீக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் மெர்சல் படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது,
`மெர்சல்' படத்தின் மூலம் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்லியிருக்கும் விஜய், அட்லி மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுக்கள். தனிமனிதனாகவோ, படங்களிலோ தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவது கருத்து சுதந்திரமே. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். தான் நினைத்ததை சொல்லும் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அது திரைத்துறையினருக்கும் உண்டு.
ஹாலிவுட் படங்களில் கூட அந்நாட்டு அதிபர்களை கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. எனவே வசனங்கள் காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல். சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.
இவ்வாறு கூறினார்.
இப்படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில், படம் வெளியான பின்னரும் மெர்சல் படத்திற்கு சோதனை வந்திருக்கிறது. படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு உள்ளிட்ட சில வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தினார்.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த காட்சிகளை தயாரிப்பு தரப்பு நீக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களமிறங்கி இருக்கின்றனர். காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் மெர்சல் படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது,
`மெர்சல்' படத்தின் மூலம் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்லியிருக்கும் விஜய், அட்லி மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுக்கள். தனிமனிதனாகவோ, படங்களிலோ தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவது கருத்து சுதந்திரமே. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். தான் நினைத்ததை சொல்லும் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. அது திரைத்துறையினருக்கும் உண்டு.
ஹாலிவுட் படங்களில் கூட அந்நாட்டு அதிபர்களை கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. எனவே வசனங்கள் காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல். சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.
இவ்வாறு கூறினார்.
விஷால் மத்திய அரசு ஜி.எஸ்.டி டிஜிட்டல் இந்தியா பணமதிப்பிழப்பு எதிர்ப்புக்குள்ளான காட்சி மெர்சல் விஜய் அட்லி சமந்தா காஜல் அகர்வால் நித்யா மேனன் ஏ.ஆர்.ரகுமான் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ் வடிவேலு atlee vijay samanthaa kajal aggarwal nithya menon mersal sj suriyah sathyaraj vadivelu controversy GST digital india demonetization Tamilisai soundarrajan vishal
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X