search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகைக்கு பாலியல் தொல்லை: திலீப்புக்கு காவல் மேலும் நீட்டிப்பு
    X

    நடிகைக்கு பாலியல் தொல்லை: திலீப்புக்கு காவல் மேலும் நீட்டிப்பு

    நடிகைக்கு பாலியல் தொல்லை வழக்கில் நடிகர் தீலிப்புக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலை கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டது.
    நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து, தாக்கிய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த 10-ந் தேதி கைது செய்யப்பட்டார். ஆலுவாவில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவருடைய ஜாமீன் மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் திலீப்புக்கு, அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விதித்த நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரிடம் கோர்ட்டு விசாரணை நடத்தியது. பின்னர், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலை கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டது.
    Next Story
    ×